நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Monday, February 29, 2016

மண்ணறை விஜயம் !

மண்ணறை விஜயம் !
.......................................
மெத்தென்றிருக்க அங்கே
மெத்தையில்லை கட்டிலுமில்லை
பளிங்குத்தரையும் இல்லை
பட்டு விரிப்புகளும் இல்லை
கட்டாந்தரையிலே கிடத்திவிடுவார்கள்!

தட்டுத்தடுமாறவேண்டும்
கும்மிருட்டு வெளிச்சமும் இல்லை!
குப்பென்று வியர்க்கும்
திறப்பதற்கு ஜன்னலுமில்லை
கதவுகளுமில்லை !
தாகமாக இருக்கும்
அருந்துவதற்கு பானங்களும் இல்லை
பாத்திரங்களுமில்லை!
உதவி தேவைப்படும்
உரத்துக்கூவினாலும்
ஒருவரும் வரவே மாட்டார்கள்!
கோடீஸ்வரன் ஒரு விநாடியிலே
பிச்சைக்காரனாகி விடுவான்!
உற்றார் உறவினர் இருந்தும்
ஓடியாட எத்தனையோபேர் இருந்திருந்தாலும்
ஒற்றையிலே உறங்குவான் !
கற்றை கற்றையாக காசை
எண்ணிக்கணக்கிட்டவனின்
கன்னத்தின்கீழே
எதற்குமே உதவாத
மண்ணாங்கட்டிகளை
மணக்கும் நீரில் தோய்த்து
வைபார்கள் !
பிணமென்ற சொல்லை
உனது பணத்தால்கூட மாற்ற முடியாது
ரணமென்றால் மருந்துகட்டி
ஆற்றிவிடலாம்
ஆனாலிதுவோ மருந்தேதுமில்லா
ம ரணம் ஆயிற்றே !
சத்தியமா சகோதரா எனக்கு மட்டுமல்ல
இது உனக்கும் ஒரு நாள்
நிச்சையம் நடக்கும்!
மு.இ.உமர் அலி
2016 Feb 29

0 கருத்துக்கள்:

Post a Comment