நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Wednesday, July 22, 2015

மாட்டுவண்டிகள்!

மாட்டுவண்டிகள்-தொடர்  3
................................
மாட்டு வண்டி வைத்திருப்போர் மாடுகளிற்கு தீவனமாக வைக்கோல்,தவிடு போன்றவற்றையே கொடுப்பதே வழமை.வயல் அறுவடை களத்தில் வைக்கோல் ஏற்றிக்கொண்டு வண்டிகள் சாரி சாரியாக செல்லும்.சூடடித்த களவெட்டியை சூட்டுக்கலவேட்டி என அழைப்பார்கள்.
சூட்டுக்களவெட்டியில் சிந்திக்கிடக்கும் வைக்கோலை வண்டில் காரர்கள் " குத்தூசி "எனப்படும் ஆயுதம் மூலமாக ஒன்று திரட்டி வண்டியில் ஏற்றுவார்கள்.சிறிய வண்டியில் பெருமளவிலான வைக்கோலை ஏற்றுவது அவர்களுக்கு அனுபவ ரீதியான ஒரு கலையாகும்.
வண்டி வீதியால் செல்லும்போது பின்னால் ,இடது வலது பக்கங்களில் வருவது என்ன வாகனம் என்று வண்டிக்காரகளால் அறிந்து கொள்ள முடியாது.
வண்டிகளில் ஏற்றிவந்த வைக்கோலை வளவுகளில் மேட்டுபக்கமான இடத்தில் நல்லதோர் அடித்தளத்தை போட்டு அதன்மேல் கும்பமாக குவிப்பார்கள்,உருவத்தில் இத்தகு ஒரு "நெற்சூடு "போல தெரியும்.இதனை "வைக்கோல் கந்து" என அழைப்பார்கள்.
இவ்வாறு குவிக்கப்பட்ட வைக்கோல் கந்திலிருந்து வைக்கோலை தினமும் உருவி எடுத்து மாடுகளிற்கு தீவனமாக போடுவார்கள்.வைக்கோலை ஒரே பக்கம் உருவாமல் வட்ட வடிவமாகவே உருவுவார்கள்.ஏனெனில் கந்து சரிந்து விழுந்துவிடாமல் இருப்பதற்காகவே.
வைக்கோல் போரின் அடியில் வீட்டின் பேட்டுக் கோழிகள் சென்று முட்டையிடும்.வீட்டுச்சிருவர்கள் மலை நேரங்களில் மறைந்து விளையாடுவார்கள்,வைக்கோல்போரில் விளையாடுவது நன்றாய் இருக்கும் ஆனால் அதன் "சுணை"இலகுவில் சென்றுவிடாது.
"சில நாய்கள் வைக்கோல் கந்தின் அடியில் தூங்கிக்கொண்டிருக்கும்,யாரும் வைக்கோல் எடுப்பதற்கென்று கிட்டபோனால் உறுமும்,குரைக்கும்,ஆனால் அந்த நாய் ஒருநாளும் வைக்கோல் உண்பதே இல்லை"
இந்தப்பிராந்தியத்திலிருந்த வண்டில்காரர்கள் எண்பதுகளிலும் அதற்கு முற்பகுதிகளிலும் வைக்கோலை சூடடித்த வயல்களில் இருந்து ஏற்றி ஒலுவில் உள்ள வைக்கோல் சேகரிக்கும் நிலையத்தில் விற்பனை செய்வது அன்று இருந்த ஒரு நல்ல வருமானமுள்ள தொழிலாகும்.நாளடைவில் பயங்கரவாதப்பிரச்சினை தலைதூக்கியதாலும் வாழைச்சேனை காகிதத்தொழில்சாலை மூடப்பட்டதனாலும் இந்தத்தொளிலும் இல்லாமல் போய்விட்டது.
பிற்காலத்தில் இயந்திரங்கள் மூலம் நெல் அறுவடை செய்ய துவங்கியதிலிருந்து உற்பத்தியாகும் வைக்கொல்களின் அளவும் இப்பிராந்தியத்தில் குறையத்துவங்கிகிற்று.இயந்திரம் மூலம் அறுவடை செய்யும்போது வைக்கோல் சிறு துண்டுகளாக சிதைக்கப்படுவதாலும் ,ஓரிடத்தில் குவியாமல் வயல் முழுக்க சிதரிக்கானப்படுவதாலும் வைக்கோலை ஒன்று திரட்டி ஏற்றுவது சற்று கடினமான விடயமாகும்,ஆனால் தீவனத்திற்காக கஷ்டப்பட்டு வண்டில் உரிமையாளர்கள் வைக்கோலை ஏற்றிச்செல்கின்றார்கள்,
இப்புகைப்படம் நேற்று நிந்தவூரில் என்னால் பிடிக்கப்பட்டது .

மு.இ.உமர் அலி
2015 july 23rd

0 கருத்துக்கள்:

Post a Comment