நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Sunday, July 26, 2015

தொட்டில் சாக்கு - மாட்டுவண்டி-4



தொட்டில் சாக்கு -
மாட்டுவண்டி-4
..............................................................
மாட்டுவண்டியின் அடிப்பக்கம் இருக்கும் பலகைக்கு கீழாக சில்லு பொருத்தப்பட்டிருக்கின்ற  அச்சுக்கு முன்பாக ஒரு சாக்கு அல்லது உரப்பையை நான்கு மூலையிலும் இணைத்து கட்டப்பட்டிருக்கும் ஒரு அமைப்பாகும் ,உருவத்தில் ஒரு தொட்டி போல இது இருப்பதனால் "தொட்டிச்சாக்கு" என பெயர்பெற்றிருக்கின்றது.
தொட்டிச்சாக்கினுள் வண்டியின் பாவனைக்கு தேவையான கயிறுகள் ,அரிக்கன் லாம்பு, புல் அறுப்பதற்கான அரிவாள் (தாக்கத்தி ),திருக்குக்கம்பு போன்றவற்றை வைப்பார்கள்,சிலர் சிறிய அளவிலான அடைக்கட்டை போன்றவற்றையும் வைப்பார்கள்.
வண்டிகள் ஏற்ற ,இறக்கமான இடங்களில் நிறுத்தப்பட்டு பொருட்கள் ஏற்றும்போது அவை முன் பின் நகராமல் இருப்பதற்காக சில்லின் அடியில் இந்த அடைக்கட்டைகளை வைப்பார்கள்.

கயிறுகளில் மூட்டான்,தேடா,நைலோன் போன்ற வெவ்வேறு வகையான கயிறுகள் வைத்திருப்பார்கள்,ஏற்றிச்செல்லப்படும் பாரங்களுக்கு ஏற்ப கயிறுகளை தெரிவுசெய்வார்கள்

பாரங்களை ஏற்றி கயிற்றினால் கட்டிய கட்டினை இறுக்குவதற்காக சுமார் ஓரடி நீளமான உறுதியான கம்புகளால் கயிற்றினை திருகுவார்கள்,இவ்வாறு திருகுதல் "திருக்குப்போடுதல்" எனப்படும்.
 காடுகளுக்கு  மரம்வெட்டச்செல்வோரில் சிலர்  தமது சமையல்  பாத்திரங்கள்,அரிசி புளி போன்றவற்றையும்  தொட்டில் சாக்கினுள்தான்  வைப்பார்களாம்.

நிந்தவூர் பிரதேசத்தில் மாட்டுவண்டிகளை தயாரிப்பதில் பிரபல்யமும் நுணுக்கமும்வாய்ந்த சுலைமாலெவ்வை ஓடாவி-அல்லது நெடிய ஓடாவி வயோதிகத்தினால் சுகவீனமுற்றதன் பின்னர் இப்பிரதேசத்தில்  உள்ள வண்டில்காரர்கள் திருத்த வேலைகளுக்காகவும் ,புதிய வண்டில்களை அமைப்பதற்காக்கவும் சம்மாந்துறை,சாய்ந்தமருது போன்ற இடங்களுக்கு செல்கின்றனர். அந்த ஒரோர்களில் இன்னும் வண்டில்கள் தயாரிக்கக்கூடிய ஓடாவிமார் இன்னும் இருக்கின்றார்கள்.

0 கருத்துக்கள்:

Post a Comment