நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Tuesday, July 21, 2015

காலாவதியான காவின்கள் !

காலாவதியான காவின்கள் !
....................................................
எண்ணங்களால்
விவாகரத்துச்செய்துகொண்ட
எத்தனையோ உள்ளங்கள்
இன்னும் ஊருக்கும் பேருக்கும்
ஒட்டிக்கொண்டு உறவாடுகின்றன!

ஒட்டறை பிடித்த
உறவுகளில்
தொடரும் பிடிவாதம்
புதிதாக வலைகளைப் பின்னி
சத்தோசத்தை சிக்கவைத்து
சிறைப்பிடிகின்றது!
அநேகமானோர்
நேர்த்திக்கடன் இல்லாமலேயே
தீமித்து
அலகு குத்துகின்றனர்
அப்பப்போ
காவடியும் கூட ஆடுகின்றனர்.
பெரும்பாலான நேரங்களில்
வார்த்தைகளுக்கு மட்டும்
தடைவிதிக்கும் வாய்
உபவாசம் இருந்து
பிறைகாணாமலேயே
பெருநாள் கொண்டாடுகின்றது!.
மு.இ.உமர் அலி
2015 JULY 21ST

0 கருத்துக்கள்:

Post a Comment