.பெண் பிள்ளையொன்று பிறந்து விட்டால் அதன் தகப்பன் தன வாழ்க்கையின் தரத்தை தானாகவே குறைத்துக்கொள்கின்றான்,ஏன் ?தனது செலவு கூடினால் செங்கல்லும் சீமெந்தும்,இரும்புக்கம்பியும்,
இந்த விடயத்தைப்பேச இவருக்கென்ன தகுதியுண்டு?இவரும் சீதனம் வான்கினவர்தானே என்று கூறிக்கூறி ,கருத்துக்களை முன்வைத்தவர்களை எள்ளி நகையாடி,எட்டி உதைத்து அவர்களது கருத்துக்களை புறம் தள்ளி தசாப்தம்களை கடந்து விட்டோம்,.பலனென்ன றிசான நபீக் மட்டுமல்ல அவரது தாயும் இந்தவகையில் உருவானவர்தான்.இவ்வாறான நடவடிக்கைகளால் நம்மால் உரமூட்டி வளர்ந்து வேட்டிஎரியமுடியாத விருச்சமாக நம் முன் நிற்கின்ற இச்சீதனம் ,எதிர்ப்புக்கூடக்கூட பரவி பலம்பெற்றதே தவிர சீதனம் வாங்குவது குறைய வில்லை.ஏனென்றால் எதிர்ப்புக்கள் உதட்டளவில் மட்டுமே பிறந்தன உள்ளத்தால் அவை வரவில்லை. கிழக்கில் சீதனம் வாங்கதவர்களை விரல் விட்டு எண்ண முடியும் ஊர் ஊராக,உலமாக்கள் இதை மேடைகளில் கூறமுடியாது,ஆசிரியர்கள் பாடசாலைகளில் கூற முடியாது,பிராந்திய தலைவர்களும் கூற முடியாது.ஏனென்றால் நாமெல்லோரும் எதோ ஒரு வகையில் சீதனம் வாங்கியிருக்கின்றோம் ஒரு சிலரைத்தவிர(அவர்கள் நமது மரியாதைக்குரியவர்கள்)
எனவே அன்னா வரும் இன்னா வரும் என்று காத்திருக்காது சமூகத்தில் புரையோடிப்போயுள்ள இந்த பயங்கரத்தினை இல்லாமல் செய்ய உடனடியாக முயற்சி செய்ய வேண்டும்,. எப்படி ?எப்படி
அன்பான தந்தைகளே,வாலிபர்களே?சகோதர சகோதரிகளே ,எதிர்கால இளைஞர்களே உங்களது ஆக்கபூர்வமான கருத்துக்களை தைரியமாக வெளியிடுங்கள்