![]() |
சுமை |
உங்கள்
அறியாப்பருவத்தில்..............................
நீங்கள் எங்களுக்கு
சுமையாகத்
தெரியவில்லை!
ஆனால்,.............!
எங்களது
இயலாப்பருவத்தில்
ஏன்
நாங்கள் உங்களுக்கு
சுமையாகிப் போகின்றோம்?.
வறுமையால் வந்த
மனச்சுமைக்கு முன்
மகனே/ளே
நீ
ஒரு சுமையா?
நாளை
நீ சுமக்கப்போகின்றாய்.
இன்றே கற்றுக்கொள்!
பெற்ற பின்னும்
இறக்க முடியாத சுமையடா..............!