நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Sunday, July 21, 2013

தற்கொலை



தற்கொலை 




எமனின் பாசக்கயிறு 
எப்படி இவன் கைகளுக்கு 
கிட்டியது?



*****************************


இலை    உதிர்த்த என்னிடம்
யாரும் வராத போது
மனிதா  எதற்காக வந்தாய்?
உனக்கும் எந்நிலையா?




கயிறு பலமா?
அல்லது 
நான் பாரமா 
என்ற போட்டியில்  
கயிறே
வென்றது ........



******************************************************************
மரமே !
நான் உன்னைப்போல
இந்த பூமிக்கு

பாரமாக இருக்க

விரும்பவில்லை !
இப்படிக்கு நான்
************************************************************


"தோல்வி என்னும் 
கோழையை 
நான் 
கொன்று 
கழுவேற்றிவிட்டேன் 
இனி 
தொட்டதெல்லாம் பொன்னாகும்
இது தைரியத்தின் கூற்று..........!

  20 04 2013

0 கருத்துக்கள்:

Post a Comment