நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Monday, December 23, 2013

“கொழுக்கட்டை”






“கொழுக்கட்டை”












கடிக்கும் போது
கடைவாயில் நீரூறும்
கடித்த இடத்தில் 
இடைக்கிடையே தேன் வடியும்!

தேங்காய் ,சர்க்கரை சேர்ந்திருக்கும்
பாங்காய் பாகும் ஏற்றிருக்கும்!

பயறும் பகுதியாய் சேர்ந்திருக்கும்
வயிறும் உப்பி பருத்திருக்கும்!

பிள்ளைத்தாய்ச்சி பெண்களுக்கு
பிள்ளை வாந்தி நின்றவுடன்
மாமி சுட்டு அனுப்பிடுவா !

கர்ப்பமான கொழுக்கொட்டை
வயிற்றில் குட்டியை சுமந்திருக்கும்
மருமகள் அதனை உண்ணனுமாம்
மாமியாரின் எதிர்பார்ப்பு!

பல்லு வைத்த கொழுக்கட்டை
பல்லு முழைக்கும் பிள்ளைக்கு
சொல்லுத்தெழிவாய் வருவதற்காம்
உள்ளே
நெல்லு வைத்துக் கொடுப்பாங்க
பிள்ளை அப்பனை ஏமாற்ற !

வண்டில் அவியும் சிலநேரம்
குண்டுச் சட்டியில் சுடுபடும் சிலநேரம்
பெண்டில் பிள்ளை எல்லாரும்
உண்டு களித்து இருப்பாங்க !

பேசாதிருக்கும் ஆட்களை
வாயில் என்ன கொழுக்கட்டையா?
சொல்லால் சொல்லி வையும்
பலகாரம்!

பொல்லால் அடித்து வீங்கியதை
கொழுக்கட்டைபோல வீங்கியதே
சொல்லால் சொல்லிக் காட்டிடுவார்
உவமானம் !


உமர் அலி முகம்மதிஸ்மாயில்
2013 12 23

0 கருத்துக்கள்:

Post a Comment