நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Wednesday, March 20, 2013

சீதனம்

காலச்சுழலில் சிக்கிய யாவும் சுழலுடன் அடித்துச்செல்லப்படுவது போல விரும்பியோ விரும்பாமலோ ,ஒன்றுடன் ஒன்று சேர்ந்து நமது சமூகத்தில் சீதனம் அப்படியே வேரூன்றி விட்டது.அதற்கு நாம் வாழுகின்ற சமூகத்தின் ஏனைய சகொதரர்களது நடைமுறைகளும் ஒரு முக்கியமான காரணி. இதனை முற்றாக இல்லாமல் செய்ய நம்மிடத்தில் என்ன திட்டம் உள்ளது?இந்த திட்டத்தை அமுல்படுத்த நம்மிடம் என்ன பொறிமுறை உள்ளது?வெறுமனே சீதன ஒளிப்புச்சங்கம் என்று ஒன்றை வைத்திருந்து என்ன பிரயோசனம்?
.பெண் பிள்ளையொன்று பிறந்து விட்டால் அதன் தகப்பன் தன வாழ்க்கையின் தரத்தை தானாகவே குறைத்துக்கொள்கின்றான்,ஏன் ?தனது செலவு கூடினால் செங்கல்லும் சீமெந்தும்,இரும்புக்கம்பியும்,கருங்கல்லும் வாங்க எங்கே காசு குறைந்துவிடுமோ என்ற அச்சத்தில்தான்.,.சீதனமாக காசு மட்டும் கொடுத்தா பரவாயில்லை,ஆனால் வீடு ஒன்று கட்டி முடிப்பதற்குள் அந்த மனிசண்ட ஆயுளே முடிஞ்சிடும்,அதற்கிடையில் அடுப்படியிலிருந்து கொண்டு அல்லாஹ்வை கூப்பிட்டதிலும்,பெருமூச்சு விட்டத்திலும் அந்த மனிசியின் பாடும்போயிடும். 5,6 பொம்பிள பிள்ளை பெற்றவனின் நிலை என்ன?ஒரு ஆண் 5 வீடு கட்டத்தேவையில்ல ஒரு வீடு மட்டும் கட்டினால் போதும் .அது அவனது வீடு
இந்த விடயத்தைப்பேச இவருக்கென்ன தகுதியுண்டு?இவரும் சீதனம் வான்கினவர்தானே என்று கூறிக்கூறி ,கருத்துக்களை முன்வைத்தவர்களை எள்ளி நகையாடி,எட்டி உதைத்து அவர்களது கருத்துக்களை புறம் தள்ளி தசாப்தம்களை கடந்து விட்டோம்,.பலனென்ன றிசான நபீக் மட்டுமல்ல அவரது தாயும் இந்தவகையில் உருவானவர்தான்.இவ்வாறான நடவடிக்கைகளால் நம்மால் உரமூட்டி வளர்ந்து வேட்டிஎரியமுடியாத விருச்சமாக நம் முன் நிற்கின்ற இச்சீதனம் ,எதிர்ப்புக்கூடக்கூட பரவி பலம்பெற்றதே தவிர சீதனம் வாங்குவது குறைய வில்லை.ஏனென்றால் எதிர்ப்புக்கள் உதட்டளவில் மட்டுமே பிறந்தன உள்ளத்தால் அவை வரவில்லை. கிழக்கில் சீதனம் வாங்கதவர்களை விரல் விட்டு எண்ண முடியும் ஊர் ஊராக,உலமாக்கள் இதை மேடைகளில் கூறமுடியாது,ஆசிரியர்கள் பாடசாலைகளில் கூற முடியாது,பிராந்திய தலைவர்களும் கூற முடியாது.ஏனென்றால் நாமெல்லோரும் எதோ ஒரு வகையில் சீதனம் வாங்கியிருக்கின்றோம் ஒரு சிலரைத்தவிர(அவர்கள் நமது மரியாதைக்குரியவர்கள்)
எனவே அன்னா வரும் இன்னா வரும் என்று காத்திருக்காது சமூகத்தில் புரையோடிப்போயுள்ள இந்த பயங்கரத்தினை இல்லாமல் செய்ய உடனடியாக முயற்சி செய்ய வேண்டும்,. எப்படி ?எப்படி
அன்பான தந்தைகளே,வாலிபர்களே?சகோதர சகோதரிகளே ,எதிர்கால இளைஞர்களே உங்களது ஆக்கபூர்வமான கருத்துக்களை தைரியமாக வெளியிடுங்கள்

0 கருத்துக்கள்:

Post a Comment