நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Sunday, August 4, 2013

மரங்கொத்தி



உளுத்த மரம்
பட்டை வெடித்தமரம்
தேடிவந்து 
புழுக்களை பிடித்துண்பாய்
உளியின்றி
மரம் துளைத்து
உள்ளாலே
ஒழித்தபுழு
இழுத்தெடுப்பாய்!


மரத்தோடு போராடும்
கூரான அலகுக்கு
உரமுண்டு மரந்துளைக்கும்
திடமுண்டு!

மரத்துக்கு சமாந்திரமாய்
உடம்பிருக்க
சொண்டுமட்டும் செங்குத்தாய்
வீற்றிருக்கும் !
ரெவ்விரண்டு கூரான
விரல்நகங்கள்
பட்டைகளை பற்றிக்கொள்ள
பரிந்துரைக்கும் !
வலிந்துதவும்!

சீரான சந்தங்கள்
அழைத்துவரும்
ஊரான சொந்தங்கள்
உன்னருகே!

காதலை சொல்லிவிட
கனிமொழி தெரியாது
உன்தலை சொல்லுமொரு
இனிமொழி இணையுடன்
இணைவதற்கே !

கிரீடமுண்டு
கொண்டையிலே
அரசில்லை,
முப்படை விழிகளுண்டு
எதிரி
மரத்துகளும்,சிராம்புகளும்
பயமில்லை!

விவசாயி கொத்துகிறான்
மண்ணை
நீயோ கொத்துகிறாய்
மரத்தை!
வயிற்றுப் பிழைப்பினிலே
இருவரும் ஒருசாதி!

நீ துளைத்த ஓட்டைக்குள்
குடம்பம் நடத்தி
குடிபெயர்ந்து போனபின்பு
ஒரு சோடி கிழிபுகுந்து
குடும்பம் நடத்துமங்கே !

மரங்கொத்தி நீ நிற்கும்
அருங்காட்சி காண்கையிலே அது
மனங்கொத்தி போயிடுமே ,என்
மனம் தத்தி தாவிடுமே
சந்தோசக் கிளைகளிலே !

0 கருத்துக்கள்:

Post a Comment