துளை விழுந்த ஓடம் படிப்படியாய் தாழும்
களை வளர்ந்த வயல் விளைச்சலில் வீழும்!
..................................................................................
நீதியறு நாடும்
ஓதலறு வீடும்
ஒருநாளும் வளராது!
..............................................
வாளியில்லாமல் வானம்
கடலில் தண்ணியள்ளுகிறது
பூவாளியால்
பூமிக்குத் தெளிப்பதற்கு!
...........................................................
பட்டியடிப்பிட்டியிலே
பொட்டியோட நிப்பவளே
பொட்டிக்க என்ன புள்ள
புட்டா இடியப்பமா?
..............................................................
பட்டைஎண்டா என்ன புள்ள
புட்டிய நான் தொட்டதில்ல
கட்டிக்கப்போறபுள்ள நீ
பெட்டியோட நிண்டதால
வெட்டியா கேட்டுப்புட்டன்
வேறேதும் இல்ல புள்ள!
..................................................................
Sunday, March 29, 2015
Tuesday, March 24, 2015
Monday, March 23, 2015
நேரமில்லை

........................
எனக்கொரு சம்மட்டி தாருங்கள்
கடிகாரத்தை கொஞ்சம் தட்டி
நேரத்தினை
சற்று கூட்டிப்பார்க்கப்போகிறேன் !
அதிகாலையைக்கொஞ்சம்
அதிகரிக்க வேண்டும்
அந்தியாவதையும்
பிந்திப்போட வேண்டும்
பகலிலே ஒரு பந்தி வைத்து
பகலவனைப் பசியாறச்செய்ய வேண்டும்
அதனால் அவனது பயணம்
கொஞ்சமாவது தாமதமாகுமல்லவா
பதற்றம் பற்றிக்கொள்ள
தொட்டதை விட்டு விட்டு
அடுத்ததைப் பார்க்கவேண்டும்
பயமும் சுயமாக வந்துவிடுகிறது !
செவ்வாய்க்குச்
செல்லும் நாட்கள் மட்டும்
நீண்டுகொண்டு செல்ல
பூமியிலுள்ளோரின் நேரம் மட்டும்
குறுகிக்கொண்டே வருகின்றது!
எனக்கொரு சம்மட்டி தாருங்கள்
கடிகாரத்தை கொஞ்சம் தட்டி
நேரத்தினை
சற்று கூட்டிப்பார்க்கப்போகிறேன்
ஏனெனில்
தொடங்கியதெல்லாம்
முடியுமுன்னே
அடுத்தவேலை வந்து
பிடரியினைப்
விடாப்பிடியாக பிடித்துக்கொள்கின்றது
சில வேலைகள் தொடங்கப்படாமலேயே
இன்னும் கிடப்பில் கிடக்கிறன!
மு.இ.உமர் அலி
2015 March 23rd
அதிகரிக்க வேண்டும்
அந்தியாவதையும்
பிந்திப்போட வேண்டும்
பகலிலே ஒரு பந்தி வைத்து
பகலவனைப் பசியாறச்செய்ய வேண்டும்
அதனால் அவனது பயணம்
கொஞ்சமாவது தாமதமாகுமல்லவா
பதற்றம் பற்றிக்கொள்ள
தொட்டதை விட்டு விட்டு
அடுத்ததைப் பார்க்கவேண்டும்
பயமும் சுயமாக வந்துவிடுகிறது !
செவ்வாய்க்குச்
செல்லும் நாட்கள் மட்டும்
நீண்டுகொண்டு செல்ல
பூமியிலுள்ளோரின் நேரம் மட்டும்
குறுகிக்கொண்டே வருகின்றது!
எனக்கொரு சம்மட்டி தாருங்கள்
கடிகாரத்தை கொஞ்சம் தட்டி
நேரத்தினை
சற்று கூட்டிப்பார்க்கப்போகிறேன்
ஏனெனில்
தொடங்கியதெல்லாம்
முடியுமுன்னே
அடுத்தவேலை வந்து
பிடரியினைப்
விடாப்பிடியாக பிடித்துக்கொள்கின்றது
சில வேலைகள் தொடங்கப்படாமலேயே
இன்னும் கிடப்பில் கிடக்கிறன!
மு.இ.உமர் அலி
2015 March 23rd
பிரிவுகள் ||
கவிதை
Sunday, March 22, 2015
Subscribe to:
Posts (Atom)