நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Friday, December 19, 2014

மிருகக்காட்சிச்சாலையில் மனிதர்கள்!




மிருகக்காட்சிச்சாலையில் மனிதர்கள்!

யார் இவர்கள் ?
மனிதர்களின் எதிரிகளா
உயிர்களை உடலினின்றும்
விடுவித்து எந்தப்பைகளில்
அடைக்கிறார்கள்?

உயிர் மதுதான்
இவர்களின் தாகமா
மயிர் போவதுபோல்
ஒவ்வொன்றாய்
வீழ்த்துகின்றார்களே!

அரக்கர்களின்
கொள்கைக்காக
கொடிபிடித்துக்கொண்டிருக்கும்
இவர்கள் சிறப்பானவர்களல்ல
வெறுப்புத்தான் வருகிறது !

சமயச் சாயம் பூசிய அறிவிலிகள்
இன்னும் சமயத்தை அறியவில்லை
இவர்கள் கொடுமையோ முடிவிலிகள்!

மிருக்கூட்டம்
செய்வதோ மடமை வேலை
கனவில் இமயம் தொடப்போகிறாராம்
இது தவறான சாலை!

மலாலா மார்பில்
ஒஸ்கார் மாலை
அவள் உறவினர் வீட்டிற்கு
தினமும் வருகிறது
பிண ஓலை !

தலைவனில்லாமல்
ஒரு தறுதலைக்கூட்டம்
தலைகள் உருட்டுது
இது ஒரே பேயாட்டம்!

வளர்த்த கடா
எட்டி எட்டி மார்பில் முட்டுது
அமெரிக்கா
எப்படி அழிப்பதென்று
அடிக்கடி கூட்டம் கூட்டுது!

மிருகங்களால் கொல்லப்பட்ட பாகிஸ்தானியச் சிறுவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள் — with Abdul Majeeth.


Tag photoAdd locationEdit
Like · · Stop Notifications · Share



Aseek Mohamed, Rifan Abubacker, Zanal Ali and 19 others like this.
1 share

Abdul Majeeth .
Aawaesam...
Anuthabam...
Arumai...
19 December 2014 at 08:22 · Unlike · 3

Ashraff Abdulcareem சமயச் சாயம் பூசிய அறிவிலிகள்
இன்னும் சமயத்தை அறியவில்லை.
இவர்கள் கொடுமையோ முடிவிலிகள்!...See More
19 December 2014 at 10:26 · Unlike · 4

Steuart Osman Theresa Mary · 18 mutual friends
யார் இவர்கள் ?
மனிதர்களின் எதிரிகளா
உயிர்களை உடலினின்றும்
விடுவித்து எந்தப்பைகளில்
அடைக்கிறார்கள்? nice
19 December 2014 at 12:18 · Unlike · 1

Meera Mahroof !
உண்மைப் போராளிகளை அவமதிப்பதற்கான மேற்கத்திய வாதிகள் ஆடும் நாடகமாககூட இருக்கலாம்தானே. இன்று கிட்டத்தட்ட 100 வீத ஊடகங்களும் அவர்கள் கையில்தானே இருக்கிறது. மட்டுமல்ல 100 வீத முஸ்லிம் நாடுகளும் அவர்களின் காலணித்துவ ஆட்சியின்கீழ்தானே இருக்கிறது. தலைநிமிர்ந்து நின்ற தலைவர்கள் சிலர் அடக்கி ஒடுக்கப்பட்டதுமல்லாமல் அழிக்கப்பட்டும் விட்டார்களே. இந்த நிலை மாறும்வரை உண்மை முஸ்லிம்கள் கொடுமையாளர்களாக சித்தரிக்கப்படுவது மாறாது மறையாது என்பது நித்தியமான நிஜம்.
19 December 2014 at 15:43 · Unlike · 2

Junaideen Athambawa ஒண்ணுமே புரியல்லே உலகத்திலே என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது ஒண்ணுமே புரியல்லே உலகத்திலே.அல்லாஹ் ஒருவனுக்குத்தான் வெளிச்சம்.நல்லது நடக்க பிராத்திப்போம்.

0 கருத்துக்கள்:

Post a Comment