நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Tuesday, December 30, 2014

கண்பட்டவயலும் புண்பட்ட உழவனும்!




கண்பட்டவயலும் புண்பட்ட உழவனும்!
...........................................................................
கரும்புபோல இருந்த பயிரு
குடலையாகி பெருத்திருந்த வயிறு!
நெருப்புவச்சி கருகினாப்போல்
சுருப்படிச்சி கறுத்திடுச்சே!

அலைபோட்ட வரவை யெல்லாம்
அலங்கோலமாய் கிடக்குதுகா
குலைபோட்ட நெற்பயிரு
நிலைகுலைஞ்சி படுக்குதுகா !

ஈரக்குலை கெடந்து நடுங்குதுகா
என்ட வட்டையை பாக்கிறப்ப
யாரிடம்போயி நான் சொல்லுவேன்
என்ட வெட்டாறும் கதையத்தான்!

ஈடுவைச்சி எடுத்த காசில்
குத்தகைக்கு எடுத்தபூமி
பாடு பட்டு நானுந்தான்
பக்குவமாய் விதைச்ச காணி !

மழையைத்தா ஆண்டவனே
என்று மன்றாடி கேட்ட நாம
அழவோட தாவென்று
கேட்கத்தான் மறந்தோமோ !

கண்படும் மச்சான் என்று
வயலப்பாதவங்க கனபேரு சொன்னாங்க
என் மனசு புண்படும் மாதிரி
ஒரு மாரி வரும் என்று
அவங்க ஒருத்தருமே சொல்லலியே!

மு.இ.உமர் அலி
2014 DEC 30TH

இந்தப்புகைப்படம் நேற்று 29ஆம் திகதி எடுக்கப்பட்டது. — with Kiramaththan Kaleefa, தமிழ்ப் பித்தன், Mageswari Periasamy and 26 others.


Tag photoAdd locationEdit
Like · · Stop Notifications · Share



மா.சித்ரா தேவி, Ramzin Mahboob, Julkarany Alil and 76 others like this.
5 shares

Farsan S Muhammad கிராமத்து சாயல் அழகு
30 December 2014 at 00:50 · Unlike · 3

Vanitha Solomon Devasigamony குலைபோட்ட நெற்பயிரு
நிலைகுலைஞ்சி படுக்குதுகா ! மழையைத்தா ஆண்டவனே
என்று மன்றாடி கேட்ட நாம
அழவோட தாவென்று
கேட்கத்தான் மறந்தோமோ !
30 December 2014 at 00:58 · Unlike · 4

Mohamed Ismail Umar Ali நன்றி Farsan S Muhammad
30 December 2014 at 00:59 · Like

Mohamed Ismail Umar Ali வரிகளை சுட்டிக்காட்டியமைக்கு நன்றிகள் சகோதரி Vanitha Solomon Devasigamony................இன்று மழையினால் பாதிக்கப்பட்ட எமது பிரதேச விவசாயிகளின் கதறல் இதுதானம்மா!
30 December 2014 at 01:00 · Like · 3

Shafath Ahmed உங்கள் கவிதையின் ஆதங்கத்தில் எனக்கும் பங்குண்டு. இம்முறை பெய்த மாரியினால் எனது நெல் வயல்களும் முற்றாக சேதமடைந்துவிட்டது.
30 December 2014 at 06:32 · Unlike · 2

Mohamed Ismail Umar Ali யாவரையும் கருத்தில்கொண்டே இக்கவிதைஎழுதப்பட்டது Shafath Ahmed
30 December 2014 at 07:07 · Like

Musthakeem Mohd

30 December 2014 at 08:06 · Unlike · 2

Jaleel Mohd

30 December 2014 at 08:25 · Like

Amier Ali MI PERFECT
30 December 2014 at 10:50 · Edited · Unlike · 2

Azhar Atham Superb
30 December 2014 at 11:09 · Unlike · 1

Kabeer Mohamed Kabeer · 115 mutual friends
nice
30 December 2014 at 11:20 · Unlike · 1

Ikram Hussain Arumai.
30 December 2014 at 13:26 · Unlike · 1

Maruthanila Niyas அருமை தோழர்
30 December 2014 at 13:35 · Unlike · 1

Fasil Mohamed pavam
30 December 2014 at 14:40 · Unlike · 1

Zhakky Ahamed · Friends with Shafath Ahmed and 35 others
nice
30 December 2014 at 16:42 · Unlike · 1

புறமறிவு புற்கலன் arumai nanpa
30 December 2014 at 18:22 · Unlike · 1

Mohideenbawa Mohamed Kaleel Alas! Great loss to all. but the village lines in your poem also a great boost to many. Beautiful.
30 December 2014 at 18:37 · Unlike · 2

Majeed Niyas Arumai.
30 December 2014 at 21:44 · Unlike · 1

Ziyath Ismail · 13 mutual friends
Vattaikka pona purisan ...varathukku munnala...8vayasu pullaikku pondati ....madivudu aththivaram podutanga. ..pullaiku udu katta oru pooham....marmahanda sithanathuku oru pooham... maadu pola saahuranda manisan ....soru thanni thingathukka...?
1 January at 12:52 · Unlike · 1

இராஜேந்திரன் கிருஷ்ணசாமி இரா கி கவலைப் படாதீர்கள். இதுதான் வாழ்க்கை . இயற்கை அதன் வேலையை செய்கின்றது. நாம்தான் . பொக்கிஷத்தைக்காக்க பெட்டகத்தை செய்ய வில்லை
1 January at 16:56 · Unlike · 1

தமிழ்ப் பித்தன் அற்புதம் சகோதரா
1 January at 17:19 · Unlike · 1

Kiliyanur Aziz Poet சாகுபடிக்குப் பெய்தால்தான்
மழை பயிர்கள்
சாகும்படி பெய்தால்
பிழை.!!!

0 கருத்துக்கள்:

Post a Comment