நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Sunday, August 17, 2014

காகம் சொன்ன சேதி




காகம் சொன்ன சேதி




கரைந்து சொன்ன
சேதி தெரியுமா
விரைந்து வா என்றது
இறைந்து கிடக்குது உணவு
உலகம் நிறைந்து கிடக்குது
விரயமாகுமுன்
விரைந்து வா என்றது !

கொத்தித் துரத்தவில்லை
பிரித்தும் பார்க்கவில்லை
தூரத்தில் இருக்கின்ற
கூட்டத்தை கூவி அழைக்குது !

விடிகின்ற கதையை
வடிவாகசொல்லுமே அது
துடிப்பான தொழிலாளி பல
படிப்பினை உனக்குண்டு !

தொழிற்சங்கம் அமைக்கல
வழிப்பறி செய்யல
விழிப்புக்கும் குறைவில்லை
மருந்துக்கும் நடிப்பில்ல!

நிற ஒதுக்கீட்டில்
ஒரு புறக்கணிப்பு
எனக்கு கறுப்பில்
திருப்தியில்லை !

புதிய பிரபஞ்சத்தில்
காகத்துக்கு நான்
வேறு நிறம் கொடுப்பேன்
வரியும் வாங்கிக்கொடுப்பேன்!
வதிய புது இடங்கொடுப்பேன்
மனிதர்களுக்கு
காகம் வகுப்பறைப்பாடம்
சொல்லிக்கொடுக்கும்
தொழிற்ச்சங்க வாதிகளுக்கு
தலைமை தாங்கும்!

சுற்றுச்சூழலுக்கான
தலைமை விருது
தரப்படுத்தலில்
காகத்தால் தட்டிச்செல்லப்படும்!

மு.இ.உமர் அலி
17Aug 2014

0 கருத்துக்கள்:

Post a Comment