நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Sunday, August 24, 2014

ஒட்டறை



ஒட்டறை

பரந்த உலகின்
ஒவ்வோர் மூலையிலும்
சிலந்தி வலையின்
விரிந்த ராஜ்ஜியம் !

இது ஒற்றை வீரன் ஆட்சி
அரசன் எட்டுக்கால் கொண்டதொரு பூச்சி
ஒதுக்குப்புறத்து கோட்டை
அதிகரித்தால் வீட்டுக்குத்தரும்
பெரும் கேட்டை!

காறி உமிழ்ந்தது சிலந்தி
அதில் தடுமாறி வீழ்ந்தது பூச்சி
மாறி மாறி இதுதான் இங்கு நடக்குது
இதுவும் ஒருவகை கண்ணாமூச்சி !


பட்டதெல்லாம்  ஓட்டினாலும்
படைத்தது  மட்டும்  ஓட்டிடாது
தொட்டால் உடைந்துவிடும்
துப்பலின் தொங்குதோட்டம்

ஓட்டியதில் ஒன்றேனும்
தப்பவில்லை அப்படியே உக்கிடும்
மிச்சமில்லை
வெறும் சக்கையாக போய்விடும்
துடித்து மடிகின்ற பூச்சி
அதைக் கடித்து உண்கின்ற ஒரு காட்சி!

பொறிசெய்ய உலகிலே
எத்தனை காரணங்கள்
அவை ஒவ்வொன்றும்
பலவற்றின் உதாரணங்கள்.

கோடைப்புழுதியுடன்
கூட்டுச்சேர்ந்து குடிவாழும்
ஒட்டறை ஒவ்வொரு போகமும்
தூசிகளோடு உறவாடி
கூட்டாஞ்சோறு சமைக்கும் !

ஒதுங்கி , தொங்கி அழகிய கோலத்தை
அலங்கோலமமாக்கும் ஒட்டறை
இடம்பெயர்ந்தை கோட்டைகளில்
பதுங்கிவாளும் பனங்கொசுக்கள்

கொடுத்துத் தின்பதற்கு யாருமில்லை
எடுத்தச் செல்வார் என்ற பயமும் இல்லை
அடுத்தவீட்டுக்காரன் என்போரில்லை
பகுத்தறிவிற்கோ இதில் விளக்கம் கொள்ளை!

ஒளி பட்டுப் பளபளக்க
வழிகெட்டு வீழுகின்ற
வழிப்போக்கர் மற்றும் கண்மூடி
தறிகெட்டுப் போவாரின்
கதைசொல்லும்
ஒட்டறை ஒட்டியதை
பற்றிக்கொண்டு உடனடியாய்
உயிர்பறிக்கும்!

சிலந்தியின் உமிழ்நீர்
உடலுக்குக் காயமாம்
உன்வீட்டு மூலையில்
அதிகம் அது சேர்ந்திட்டால்
வீட்டுக்குச் சேதமாம்!

மனங்களுக்குள் சிலந்தியுண்டு
அவை பின்னும் வலையுமுண்டு
சனங்களுக்கு தெரிவதில்லை
கள்ள மனம் புரிவதில்லை!

தேன் இனிக்கப்பேசிடுவார்
பல் இழித்துச் சிரித்திடுவார்
மான் வேட்டை செய்வதற்கு
மடுவெட்டிக் காத்திரிப்பார்!

உள்ளச்சுவரை நீயும்
அடிக்கடி ஒட்டறை அடி
மற்றவரை மாட்டவைக்கும்
மனப்பொறியை விரட்டியடி!

0 கருத்துக்கள்:

Post a Comment