நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Tuesday, September 16, 2014

மீட்டுப்பார்த்தால்!




மீட்டுப்பார்த்தால்!
................................

அந்தகாரத்தின்
அணுங்குப்பிடியில்
நமது கிராமங்கள்
அப்போது
பச்சையும் நீலமும்
கொடிகட்டிப்பறந்தது!
சிவப்பு சிந்தனை பீறிட
சீறிப்பாய்ந்துகொண்டிருந்தது!

எல்லைகளுக்கு
கால்முளைத்து எம்மை
சுருக்கிக்கொண்டிருந்தன!

காலம் உண்மைகளுக்கு
மைபூசி
இருட்டுக்குள்
கருக்கிக்கொண்டிருந்தது!

குத்தகைக்குக் கொடுப்பவர்கள்
எமது கண்களைப்பிடுங்குவதற்காக
தலைகளைத்
தடவிக்கொண்டிருந்தார்கள்!

சூல்கொண்ட மேகங்கள்
முட்டுவதற்கு மலையோ
மரமோ இன்றி
அலைந்து கொண்டிருந்தது!

சிறையிலடைக்கப்பட்ட சுதந்திரம்
இரவுகளில்
கூடையில் வைத்து
கூவி விற்கப்பட்டுக்கொண்டிருந்தது!

நடமாடியவாறே
மண்டிபோடப்பழகியிருந்தோம்
நடைப்பிண வாழ்க்கை !

சுதந்திர இலங்கைக்குள்
குட்டிக்காலனித்துவம்
கோலோச்சிய காலமது !

உரத்துக் கேட்கப்பட்ட
உரிமைகளின் முதுகில்
சவுக்கடி பட்டு
தழும்புகள் எழும்பியிருந்தன!

கும்மிருட்டில்
குடமெழுகாக வந்து
உருகி எல்லா
இடமும் ஒளி தந்தது
ஒரு ஒளிப்பிரளயம் !

ஆயிரத்திலல்ல
இனி ஆயுளிலுமே
யாரும் அப்படி இருக்க முடியாது !

விம்பமே இல்லாத உருவம்
நமக்காகவே உருகி
மறைந்துபோன உயிர்!

காற்றுப்பதியம்
கச்சிதமாய் நடந்தது
இணைக்கவர் சுட்டிபோல
கிளைவிட்டுப்படர்ந்தது!

வீடுகளே முதற்களமாகின
தந்தைக்கும் மகனுக்கும் முரண்
உணவுகள் மறுக்கப்பட்ட இளவல்கள்
பள்ளித் திண்ணையில் படுத்தனர்
தாய்மார் முந்தானையால் மூடிப்
பின்பக்கமாக பிசைந்த ஊட்டிய சோற்றின் பலம் கட்சியை கட்டிக் காத்தது!

அந்த வேர்கள் நீரை
உருஞ்சிக்கொடுத்துக்கொண்டே இருந்தன
விழாமல் காக்க விழுதுகள்
விழுந்து விழுந்து எழுந்தன !

கனவுத்தீ
அனல்விட்டெரிந்தது
படிப்படியாக
அடிமைச்சாசனத்தை அடியோடெரித்து
சாம்பலாக்கியது!

அடடா என்னே பிரகாசம்
அந்தக்கண்களுக்குள்
ஒரு துண்டுச்சூரியன் சிறைப்பட்டிருந்தது
சுட்டெரிப்பதற்கும்
சுடர்விடுவதற்காக்வும்தானே !

அப்போதெல்லாம்
தென்றல் புயலாக வந்தது
செந்தீ குளிராக இருந்தது!

கறையான் புற்றுக்கள்
கந்தகத்தால் தகர்க்கப்பட்டன!

இலையான்கள் போல்
எல்லோரும் மொய்க்கத்துவங்கினார்கள்!

நன்றாக இனித்திருக்க வேண்டும்
புறங்கைகளையும் நக்கினார்கள்!

களைத்துப்போகவில்லை
அந்த வேகத்தைப்பார்த்து மற்றவர்கள்தான்
மலைத்துப்போனார்கள்!

சொப்பனங்கள் விற்பனைக்கு வந்ததால்
மறுதலிக்கப்பட்டவை எல்லாம்
மலிவாகக்கிடைத்தன!

சிகரங்களிற்கு மக்கள்
சிரமமின்றிப்ப யணித்தார்கள்
உயரங்களிலும் சஞ்சரித்தார்கள் !

ஒப்பங்கள் சூறையாடப்பட்டன
சிலர் கப்பமும் வாங்கத்துவங்கினர்!

முழுநாடும் கிலாகித்தது
உலமெங்கும் புகழ் வியாபித்தது !
சில புரையோடிப்போன உள்ளங்கள் மட்டும்
ஓயாமல் குழி தோண்டிக்கொண்டே இருந்தன!

ஒற்றை விருட்சம்
எத்தனை தோப்புக்களைத தந்தது

குறுநில மன்னர்களுக்கு பல
பட்டாவும் போட்டுக்கொடுத்தது !

கொலு பொம்மைகளை
கொல்லைக்கு அனுப்பியது!

இருளுக்கு வெள்ளை அடிக்கவென்று
வெளிக்கிட்ட
தலைக்கனம்பிடித்த ஒற்றைத்தீகுச்சி
பற்றி எரிவதுபோல்
உரசி உரசியே வெடித்துச்சிதறியது !

அடிக்கடி இவரைக்கனவில் கண்டதாக
சிலர் பொய் சொல்லுகின்றனர்
ஆனால் உண்மையாக கண்டவர்கள்
ஊமையாக இருக்கின்றனர்
ஏனெனில் கனவில் அவர் கூறியதை
வெளியே சொல்ல முடியாது
நிச்சயமாக அவர்களைப்பார்த்து
அவர் புன்னகையால் சபித்திருப்பார்!

முன்பு முழுச்சுவரொட்டியிலும்
இவரே இருப்பார்
இப்போதெல்லாம்
சுவரொட்டிகளில் இவரது புகைப்படம்
குறுகிப்போய்விட்டது!
வேறு சிலர் அதனை விழுங்கிப்
பருத்துவிட்டனர்!

முகம் நிறைய முடியிருந்தும்
தாடிக்கார்னென்று யாரும் அழைக்கவில்லை
மொட்டையன் என்றே
மூளையைக்குத்திக்காட்ட
செல்லமாய் அழைத்தார்கள்!

அப்பாவின் புகைப்படங்களை
மாட்டிக்கொள்ளாத வீட்டுச் சுவர்கள் மட்டுமன்றி
உள்ளச்சுவர்களும்
உருவப்படத்தை இன்னும்
சுமந்துகொண்டுதான் இருக்கிறது!

அகாலமரணமடைந்து இலங்கை முஸ்லீம்களை கரையேற்றும் பணியில் தன்னை அர்ப்பணித்த தலைவனுக்கு
இந்த ஏழையின் சமர்ப்பணம்!

மு,இ.உமர் அலி
16 sept 2014 — with Meera Mahroof, Thaiyeeb Vellaiyan, Mohamed Naleer and 34 others.


Tag photoAdd locationEdit
LikeLike · · Stop Notifications · Share



Vizaam Raheem, Ibra Lebbai, Mohamed Yaseen Salahudeen and 192 others like this.
56 shares

பிரகாசக்கவி கவிதைகள் Nice
16 September at 08:41 · Unlike · 1

Fasil Mohamed ஈனப்பிறவிகளுக்கு
கொடுக்கப்பட்ட
உன்னத தலைவன்,இவரை பெற்றவர் பட்ட
இன்பம் நாமும்
பெற்றோமல்லோ
16 September at 09:08 · Unlike · 3

Samalfasi Rufi சிலவிடக்களில் ததும்பி வடிகிறது தேன்
16 September at 09:09 · Unlike · 2

Shafie Hathim · Friends with Mabrook UL and 16 others
இமயம் இருந்த கதிரையிலே ஒரு இலையான் இருக்கிறது!.., அது கிழக்கின் வீர மகனின் இருக்கை தன்னில் மலத்தைக் கழிக்கிறது!,.. கூட்டிக் கொடுக்கும் மாமாக் கூட்டம் இதனை ரசிக்கிறது!,.., கூனிக் குறுகி எனது இதயம் கண்ணீர் வடிக்கிறது!,...
16 September at 11:32 · Edited · Unlike · 10

Farsan S Muhammad மறக்க முடியா மாமனிதர்
16 September at 11:22 · Unlike · 1

Najimudeen Ahmad · 29 mutual friends
Manitham niraintha manithan...
16 September at 11:37 · Unlike · 1

Riyajath Mohamed · 14 mutual friends
iruntha pothu avar muthukil kuththinaarkal.ippothu ella post office kalilum avar muhaththil kuththukiraarkal.
ashraf sihabdeen kavithai
16 September at 11:43 · Unlike · 1

Saheed Sareef · 17 mutual friends
Unnatha manithar
16 September at 11:45 · Unlike · 1

Mohemed Rafeek · 10 mutual friends


16 September at 11:46 · Unlike · 2

Aboosali Mohemed Sulfikar · 26 mutual friends
உன்னத தலைவன்
16 September at 11:47 · Unlike · 1

Nibras Alm Nskaif · 9 mutual friends
Nice
16 September at 11:57 · Unlike · 1

Sameem Moosa
البقاء لله - Aameen

16 September at 12:01 · Edited · Unlike · 2

Musthafa Abul Kalam Arumai. Aththanayum Unmai. U r a Maha Kavi.
16 September at 12:04 · Unlike · 2

றாபியின் கிறுக்கல்கள். தலைவரின் நினைவாக இதைவிட அழகாக கவியெழுத முடியாது.
வாழ்த்துக்கள் தோழா.
இரண்டு முறை
வரிவரியாய் சுவைத்தேன்.
16 September at 13:10 · Edited · Unlike · 4

Jabir Mohammad · 60 mutual friends


16 September at 14:00 · Unlike · 1

Julkarany Alil //////இருளுக்கு வெள்ளை அடிக்கவென்று
வெளிக்கிட்ட
தலைக்கனம்பிடித்த ஒற்றைத்தீகுச்சி
பற்றி எரிவதுபோல்
உரசி உரசியே வெடித்துச்சிதறியது !///// வளர்க உமது கவி நயம்!
16 September at 14:04 · Unlike · 1

Mohemed Rafeek · 10 mutual friends


16 September at 14:27 · Unlike · 2

Jabir Mohammad · 60 mutual friends
இலங்கை முஸ்லிம்களி விடிவுகா தன்னையே தியாகம் சொய்த மாமணிதன் எங்கள் தலைவர் எம்.எச்.எம் ,அஷ்ரப் என்று எங்கள் மனதில் இருக்கின்றார்
16 September at 14:48 · Unlike · 1

Raazi Roxx Rey · 8 mutual friends
Emathu samuthayam ivaraipondru innm pala aalumaihalai en uruvakka maranthathu
16 September at 15:09 · Unlike · 1

Mohamed Ameer No words. Wonderful
16 September at 17:55 · Unlike · 1

Mohaimin Farhan Awesome!
16 September at 18:08 · Unlike · 1

Azhar Atham we can't imagine his dedication for all community in SL
16 September at 20:43 · Unlike · 1

Mohamed Sabry அருமையான கவிப்பதிவுக்கு வாழ்த்துக்கள் நண்பரே..

தனித்துவம் பேசி எம்மவருக்கு முகவரி பெற்றுத்தந்த மிகப்பெரும் ஆளுமைக்கு இறைவன் மண்ணறையை பிரகாசிக்க வைத்துவிடுவானாக!
16 September at 21:09 · Unlike · 2

Sana Simtha · Friends with Shameem Mohamed and 26 others
Aameen
16 September at 22:10 · Unlike · 2

Mohamed Askar M. Muszamil Always Our good leader
17 September at 12:56 · Unlike · 1

Anver Abdul Haleem amazing
17 September at 14:15 · Unlike · 1

Ahamed Zacky · 25 mutual friends
சபாஷ்! "கும்மிருட்டில்
குடமெழுகாக வந்து
உருகி எல்லா
இடமும் ஒளி தந்தது
ஒரு ஒளிப்பிரளயம் !
ஆயிரத்திலல்ல
இனி ஆயுளிலுமே
யாரும் அப்படி இருக்க முடியாது !"
18 September at 14:53 · Unlike · 1

Vizaam Raheem our leader
20 September at 15:22 · Unlike · 1

0 கருத்துக்கள்:

Post a Comment