நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Monday, September 22, 2014

எங்கள் கனவுகள் எங்கே?




எங்கள் கனவுகள் எங்கே?
...............................................

செயலின் கைகள்
செயற்கையாக கட்டுப்பட்டு விட்டன
மூக்குத்தறிக்கப்பட்டு
மூக்கறையர்களாக
புழுதிக்காற்றை சுவாசிக்கின்றோம்!

நாக்கு நுனிகள்
மெல்லண்ணத்துடன்
வன்மையாக இழுத்துப்
பிணைக்கப்பட்டுள்ளன!

எங்களது மொழிகளை
அறியாத நபர்கள்
மொழிபெயர்க்கின்றார்கள் !

செவிகள் சிதைந்து
செடி நாற்றம்
சீள்வடிந்து
தோள்மேலே விழுகின்றது !

விழிகளில் ஒளி ஊடுருவமுடியாத
மர்மத்திரை
தெளிவற்ற காட்சிகளே
தென்படுகின்றன!

செம்பட்டை படிந்த கேசம்
எம்புட்டு கதைகளை
எங்களுக்குச் சொல்லுது!

மழிக்கப்படாத மீசையும் தாடியும்
கண்ணாடியைப்பார்த்து
பழித்துக்கொண்டிருக்கின்றது
தன ஓட்டைப்பல்லால்
இழித்துக்கொண்டிருக்கின்றது !

ஓ,,,,
தலைவர்களே
எங்கள் கனவுகள் எங்கே?
விற்றுவிட்டீர்களா?
புதைத்துவிட்டீர்களா?
கப்பலேற்றி கடல் கடந்து
அனுப்பிவிட்டீர்களா?

இன்னும் உயர
ஏறவேண்டும்
என நினைத்தது
நப்பாசையா
இல்லை தப்பாசையா?

ஏறிய ஏணி தடுக்கி
கீழே விழுந்து
இடுப்புடைந்து முழுச்சப்பாணி
ஆகிவிட்டோமே!

எங்களை அவர்கள்
சிறைப்பிடித்துள்ளார்ர்களா?
இல்லை நாங்களாகவே அவர்களிடம்
சரணடைந்து விட்டோமா?

சோம்பல் முறித்துக்கொண்ட மனம்
கண்களை கசக்கிக்கொண்டு
நெற்றியைச்சுருக்கி நேரே பார்க்கிறது
ஒளிப்புள்ளி
ஒற்றைப்புள்ளியாகி
அந்தகாரத்துக்குள்
ஒழித்துக்கொள்கின்றது!

மு,இ.உமர் அலி
2014 Sept 22nd — with Meeralabbai Samsunali, Rahuma Ji, Mohamed Janofar and 43 others.


Tag photoAdd locationEdit
LikeLike · · Stop Notifications · Share



Ashfa Ashraf Ali, Pesum Kavithaikal, கவிஞர் நாகூர் காதர் ஒலி and 62 others like this.
1 share

View 5 more comments

Mohamed Ismail Umar Ali உங்களது பின்னூட்டங்களுக்கு மிகவும் நன்றி Farsan S Muhammad,Fasil Fasil Mohamed,Simijon Simijon Jon,Shanthini Shanthini Balasundaram,Thirugnanasampanthan Thirugnanasampanthan Lalithakopan
22 September at 16:59 · Like

Meera Mahroof !
ஓ,,,,,
தலைவர்களே
எங்கள் கனவுகள் எங்கே?
விற்றுவிட்டீர்களா-?
புதைத்துவிட்டீர்களா?
கப்பலேற்றி கடல் கடந்து
அனுப்பிவிட்டீர்களா-?

அருமை. உமர் அலி.
22 September at 21:25 · Unlike · 1

Mohamed Ismail Umar Ali நன்றி சேர் Meera Mahroof
23 September at 05:48 · Like

Dushyanthi Dushy Arumai
23 September at 14:05 · Unlike · 1

Pesum Kavithaikal அருமையான சிந்தனை வாழ்த்துக்கள்!!!
25 September at 10:02 · Unlike · 1

Mmed Amein these so called leaders do eat their own flesh & drink ummah's blood by commercialized politics.what a pity? oh our community! when are going to wake up from this rubbish politics?
5 hrs · Unlike · 1

0 கருத்துக்கள்:

Post a Comment