நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Tuesday, September 23, 2014

தொலைந்தது தூக்கம்!





தொலைந்தது தூக்கம்!
.........................................

வயிறு நிறைய சாப்பாடு
மனசு சொல்லுது
நீ போய்ப்படு!

தேகம் மட்டும்
மெத்தைக்குள் புதைந்துவிட
நித்திரை இல்லாதது
பெரும் சோகம்!

பிடித்து எறிய எறிய
எலியொன்று
மண்டைக்குள்
புகுந்தோடுது
இல்லாத வளையைத் தேடுது!

ஓட்டைகள் உள்ளன
மூட்டைப்பூச்சிகள் இல்லாத
கட்டில் ஆனால்
ஏதோ ஒன்று
குத்திக்கொண்டே இருக்கிறது!

தூசுதட்டிப்போட்ட படுக்கை
நித்திரைகுப்பதிலாக
பெரும் யோசனை
உடம்பிலே ஏதோ ஊருவதை
உணர்கின்றேன்!

புரண்டு படுக்கிறேன்
உருண்டு பார்க்கிறேன்
இறுக மூடிய விழிகளின்
இருண்ட திரையினில்
நிழல்படங்கள்
ஓசையின்றி
தொடராக ஓடுகின்றன!

சீரான மூச்சு இடைக்கிடை
பெருமூச்சை பிரசவிக்க
மனசுக்குள் தாழமுக்கம்
அதனால் ஒரே புழுக்கம்!

பரபரப்பான ஒய்வு
கட்டிலில் ஒரு
கட்டாயச்சாய்வு!

குவளையில் நிரப்பிய குடிநீர்
மிரடுகளால் மாயமாகிய தூக்கத்தைப்போல
தொலைந்தே போய்விட்டது!

அறையை நான்
இருட்டில் குறுக்குமறுக்காக
அளந்துபார்க்கிறேன்
நீளமும் புரியவில்லை
அகலமும் தெரியவில்லை!

என்னுடனேயே உறங்க ஆரம்பித்த
எனது கடிகாரமும்
பக்கத்துவீட்டுச்சேவலும் விழித்து
எழுந்துவிட்டன!

இப்பொழுதான்
இரவை
யாரும் திருடிவிடாமல்
காவலிருந்த கண்கள்
சோர்ந்துபோய் செருகத்துவங்குகின்றன
சற்று அயர்ந்தேன்
அந்த சந்துக்குள்
அவலமான கனவொன்று
அலறிக்கொண்டு
விழிக்கையிலே
ஆவிபறந்து சிரிக்கிறது
மூடாத தேநீர்!

ஆனால் குசினிக்குள் இருந்து
தினமும் அதிகாலை அர்ச்சனை
இதுவும் எனக்குப் பெரும் பிரச்சினை!

எல்லோருக்கும் சுகமான இரவு
எனக்குமட்டும் பெரும்
சாபமானது!

நிச்சயமாக இது கிறக்கமில்லை
எனக்கு கிறுக்குமில்லை
உண்மையைச்சொல்லப்போனால்
எனக்கு இரவில் உறக்கமில்லை!

நித்திரையைத்தேடிய கண்கள்
குழிக்குள் ஆழப்புதைந்துவிட்டன
"சுருமா" இடாமலே
கண்களைச்சுற்றி கருவளையம்!

இளைத்து விட்டேன் என்கிறார்கள்
நான் மனத்தால் களைத்துவிட்டேன்
எனப்புரியாதவர்கள்!

மு.இ.உமர் அலி
2014 Sept 23rd — with யாழ் நிலவன், யாழ். இலக்கியக் குவியம், Anwardeen Faariz and 43 others.


Tag photoAdd locationEdit
LikeLike · · Stop Notifications · Share



Meera Mahroof, Pesum Kavithaikal, ஈழத்தென்றல் கவிதை and 42 others like this.
7 shares

மது மதி First class.
23 September at 05:26 · Unlike · 1

Abdul Majeeth .
Athigamanorin
Irawu
Ippaditaan
Kazligrathu...
23 September at 05:34 · Unlike · 1

Yousuf MOhamed முதுமை வந்து விட்டாலும் இதுதான். மனதில் பிரச்சினைகளின் அழுத்தம் இருந்தாலும் இதே நிலைதான். இறைவனை நினையுங்கள் எல்லாம் நலமாகும்.
23 September at 06:06 · Unlike · 2

நிந்த மணாளன் Arumai
23 September at 06:34 · Unlike · 1

தமிழ்ப் பித்தன் இருட்டு "
திருட்டு போகாமல்
காவல் இருந்த கண்கள்
அருமை சகோதரா
23 September at 07:35 · Unlike · 1

றாபியின் கிறுக்கல்கள். அருமை நண்பா
வார்த்தைகளெல்லாம் உன் வசமாகிவிட்டன.
23 September at 09:14 · Unlike · 2

Jaleel Mohd கவிஞ்சரே உங்களை வாழ்த்திட வார்த்தைகள் தேடுகிறேன் அருமை ..
23 September at 09:32 · Unlike · 1

Najimudeen Ahmad · 29 mutual friends
Sotkal nitthirai viddu yelunthu oduhinrana.....unnmaithaan, iravuhal nammai uranga waithaalum sila ninaivuhal nammai uranga viduwathillai...!!!
23 September at 09:44 · Unlike · 1

Amier Ali MI · Friends with Najeeb Ahamed and 168 others
REALLY SUPERB LINES
23 September at 10:21 · Unlike · 1

Abdul Hamed E Sahurudeen .
தூக்கம் இழந்த துக்கம் விடியும்வரை காவலாய்
விடிந்ததும் கண்ணயர அர்ச்சனை ஆரவாரம்,,
விளங்காத ஏதோ ஒன்றில் சிக்கித்தவித்தே
விசாரணை இல்லாத கைதியானேன்.....
ஆனாலும் இறுதிவரையில் நீ இளைத்ததின்
காரணத்தை இலைமறைகாயாய் வைத்து
எந்தன் உறக்கத்தையும் நீ பறித்துக்கொண்டாய்
23 September at 11:19 · Unlike · 1

Shanthini Balasundaram · 16 mutual friends
பிடித்து எறிய எறிய
எலியொன்று
மண்டைக்குள்...See More
24 September at 05:15 · Unlike · 1

Thahir Meerasha · 3 mutual friends
Good
24 September at 08:55 · Unlike · 1

மா.சித்ரா தேவி Nice
24 September at 16:57 · Unlike · 1

Pesum Kavithaikal இளைத்து விட்டேன் என்கிறார்கள்
நான் மனத்தால் களைத்துவிட்டேன்
எனப்புரியாதவர்கள்! மிக அருமையான வரிகள் சகோதரன் !!!வாழ்த்துக்கள்!!!
25 September at 09:59 · Unlike · 1

0 கருத்துக்கள்:

Post a Comment