நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Friday, February 21, 2014

சத்திர சிகிச்சை!















சத்திரசிகிச்சை!

சத்திர சிகிச்சை திடீரென வந்தது
திட்டமிட்டுச் செய்வது
புத்திரப் பேற்றில் சத்தமின்றி
வெட்டி எடுக்கவும் செய்வது !

உயிர்காக்க செய்வார் உன்
பிணிபோக்கச்செய்வார்
உயிர்போக்கி மீண்டும் பத்திரமாய்
உணர்வினை மீட்பார்!

உறுப்புக்கள் மாற்ற மிகவும்
பொறுப்பாக செய்வார்
அழகைக் கூட்ட மிக
நுணுக்கமாய் புரிவார்!

ஒருவரல்ல இருவரல்ல
ஒருகுழு இணைந்து செய்வது
பலபேரின் நன்மைக்காய்
பல வழியில் முனைந்து நடப்பது!

வித்தை இது சிந்தை சிதறிடாமல்
கண்ணும் கருத்துமாய் புரிவது
நத்தை வேகமல்ல இது, பல குதிரை வலுக்களை
எண்ணத்தில் கொண்டு கரங்கள் செய்யும்
ஒத்திகை பார்க்காத உண்மை நாடகம்.

நித்தரை கெட்டிடும் முதல்நாள்
அச்சத்தால் அதுபோல்
நித்திரை எட்ட நிற்கும் மறுநாள்
வெட்டிய தசையின் வலி எச்சத்தால் !

பதற்றத்துடன் பரபரத்த பார்வை
பிதற்றலுடன் படபடக்கும் நெஞ்சு
முதற்றடவை என்பதால் உனக்கு
முற்றிலும் புதிது இது ,
அதற்காக தேவையிலலை நீ அஞ்ச !

உணர்வுகள் முழுக்க மறைந்துபோகும்
தொடர்புகள் எல்லாம் அறுந்து போகும்
இடுப்புக்கு கீழே விறைத்து விடும் அன்றி
குறிப்பிட்ட பகுதி மரத்துப்போகும்!

கத்தரிக்கோல் சித்திரம் வரையும்
உள்ளுறுப்பை கைகள் அளையும் மாத்திரம்
பார்த்திருப்போர் கண்கள் அவற்றை
மனக்கண்ணில் பதியும் பத்திரம் !

வெள்ளை உடுப்புக்கள்
வழிக்கப்பட்ட தோல் இப்படி
கொள்ளை ஆயத்தங்கள் உன்னால்
அளிக்கப்பட்ட சம்மதத்துடன் !

பட்டினியாய் சில நாழி
படுக்க வேண்டும் நீ தோழி
இத்தனையும் உன் நலனை
எடுத்தியம்பும் நல் வழி!

உற்றார் உறவினர்கள் புடைசூழ்ந்து
வழியனுப்ப அச்சத்தை ஆடையாக
உடுத்திக்கொண்டு தள்ளுவண்டியிலே
விழியோரம் நீர்ததும்ப உண்பயணம்!

ஒளிக்கோப்பை தெரியும்
உன் பெயரைதெரிந்து கொண்டே
விழிபார்த்து கேட்பார்கள் வேண்டுமென்றே
உன் நிலை அறிந்திடவே!

மல்லாந்த நிலையில் நீ படுக்க
உனைப்பார்த்த ஒளிக்கோப்பை
நல்ல பிரகாச வெளிச்சத்தை
உன்மேல் தொடராக உமிழும்!

தோலில் சில வண்ணத் திரவங்கள்
கைபடாமல் தோய்ந்துவிட
தோலை நேராக கிழிக்குமொரு
கூரான முனை நெளிவு சுழிவின்றி!

உனக்குப்பதிலாக ஒரு
இயந்திரம் சுவாசிக்கும்
உன் இதய ஓட்டத்தை
ஒரு திரை தொடர்ந்து வாசிக்கும்!

ஊசியும் நூலும்
ஒன்று சேர்ந்து
பிரிந்த உன் பகுதிகளை
விரியாமல் கூட்டித்தைக்கும்

சிலவேளை புதிதாய் குழாய்கள்
முளைத்திருக்கும் அங்கு
அழிந்துபோன சில உறுப்புக்கள்
வெட்டிக் கழிந்திருக்கும் !

நினைவுடன் போன நீ
அரை நினைவு மயக்கத்தில்
அரட்டல் புரட்டலுடன்
திரும்பி வந்தாய் ஆர்ப்பாட்டம்
ஏதுமின்றி ..............!

உமர் அலி முகம்மதிஸ்மாயில்
2014 21st feb

0 கருத்துக்கள்:

Post a Comment