ஓதிடும் வேதம்
ஒருநாளும் இங்கில்லை
சிறு பேதம்!
ஒரு கொடி மலராக
ஒருக்காலும் பிரியாது
மனதினை மனம் பிணைந்து
மணம் பரப்பும்!
புரிதலை புரிகொண்டு
திரித்திடும் கயிறு இது
அன்பினை பருகி நிதம்
வளர்ந்திடும் பயிறு இது!
விரிசல்கள் வந்தாலும்
ஸ்பரிசத்தால் மறைந்துவிடும்
கரிசல் காட்டிலுண்டு
பாரீஸ் நகரிலுமுண்டு!
கள்ளி முள்ளிலும்
மெத்தைச் சுகம் காணும்
உள்ளம் கொள்ளை கொண்ட
உத்தம உணர்வு!
அள்ள அள்ள ஊறும்
அதிசயக் கிணறு
உள்ளத்தில் தோன்றும்
அளவிலா ஊற்று!
வாழ்க காதல்
உண்மைக்காதல்!
ஊடலும் கூடலும் வாடிக்கை
ஆடலும் பாடலும் கேளிக்கை !
தொடுதலும் புரிதலும் இங்குண்டு
0 கருத்துக்கள்:
Post a Comment