நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Wednesday, February 26, 2014

நாவடக்கு!



தீ சுட்டாப் பொரி
நா சுட்டாவடு!
நா கட்டிச் சிரி
நீ சுடாதே நாவாலே வடு!

உன் நாக்கு நீண்டு
உள் மனதின்
ஆழத்தை
ஊரார்க்கு காட்டும்
தானாகத் சென்று !

பூக்களைப்
பொசுக்கும் பொல்லாத
கனல் அதுவே !

நாக்கினைப் பல்லால்
காப்பின்
ஆக்களின் அதிகாமானோர்
உனக்கினி கூட்டாளி!

புரண்டு புரண்டு
போக்கினை புரட்டிச்செல்லும்
நீண்டு நீண்டு
உண்மையை திரித்திச் செல்லும்!

வாழவேண்டிய பல
விருட்சங்களை
விழவைக்கும்!

பூவுக்கு தேன்
இதழிலே இல்லை அதுபோல்
நாவுக்கு மருந்து
வாயினில் இல்லை!

உள்ளமே
உன் நாவு
அதை மென்மையால்
நீ தடவு
வரப்போகும் வார்த்தைகள்
தேன் தடவித்தான் வரும்!

உச்சரிக்க முன்
கத்தரிக்க வேண்டும்
எச்சரிக்க மறந்தால்
தத்தளிக்க கூடும்!

சுவை அறியும்

நாக்கு

அடங்காமல்

பகை புரியும்!


நாக்கட்டி நீ
அன்புக் கோட்டை கட்டு,
தீக்கட்டி தெறிக்காமல்
மனக் கோட்டையைக்
நீ கட்டு!

0 கருத்துக்கள்:

Post a Comment