நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Saturday, February 22, 2014

மசுக்குட்டான்!
















மயிர்க்கொட்டி

சித்திரைப் புழுக்கம்
வியர்த்து வடியும் நாட்கள்
பூவரசம் பட்டைகளில்
சித்திரம் ஓட்டினால்போல்
ஆரவாரமின்றி அசைகின்ற
புழுக்கூட்டம்!

கிட்ட நெருங்கி
உற்று நோக்கினால்
உண்மை தெரியும் புழு
நெளிவதும் புரியும்!

பட்டுப்போல உடம்பிலே
பட்டவுடன் எரித்து விடும்
கூரியங்கள் வீரியமாய்
நீட்டிக்கிட்டு நிற்குது
உன்னை பயமுறுத்திப் பார்க்குது!

சண்டைக்கு தயார்போல
சிலிர்த்து கொண்டு நிற்குமே
முண்டக் கண் கொண்டு
முறைத்துத்தான் பார்க்குமே!

இலைகளின்கீழ் ஒருகூட்டம்
ஒழிந்திருக்க மரக்
கிளைகளில் ஒருபாட்டம்
மறைந்திருக்கும்!

பார்த்திடும் போதே பயங்காட்டும்
அதைக் கண்டால் யாரும்
மரப் பக்கம் வராமலே ஒரே ஓட்டம்!

காற்றிலே அசைந்திடும் கிளை
புழு உமிழ்நீரால்
பின்னிடும் இழை !

இழையிலே இறங்கிடும் புழு
உன் முகத்தில் தாவிடும்
சில பொழுது!

அழகான அன்னைக்கு
அவலட்சணப் பிள்ளை
அருகாலே சென்றிட
யாருமே இல்லை!

முட்டையிலே மயிரிலே
ஆனால் அதன்
குட்டியிலே மயிருண்டு
ஆண்டவனின் அற்புதம் இது
ஏட்டிலுள்ள தத்துவம்!

முருங்கையும் ,மாதுளையும்
வாழிடமாச்சு முட்டை
பொரித்து வளரிடமாச்சு!

கூடு கட்டும் முன்னர்
கோடு போட்டு போயிடும்
கூட்டுக்குள்ளே போனபின்
கூரியங்கள் விழுந்திடும்!

நடமாட்டம் கூடினால் கொல்ல
நடவடிக்கை எடிப்பார் நல்ல தீ
பந்தங்கட்டி பொசுக்குவார்
கந்தை வெட்டி அகற்றுவார்!

நஞ்சடித்துக் கொன்றவர்
இன்று கூடடித்து வளர்கிறார்!

வண்ணத்தி அழிந்தது
வண்ண நிறங்களெல்லாம் மறைந்தது

மசுக்குட்டான் காணல
இனம் பொசுங்கிட்டோ தோணல!

உமர் அலி முகம்மதிஸ்மாயில்
26th feb 2014

0 கருத்துக்கள்:

Post a Comment