நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Friday, March 7, 2014

கருக்கலைப்பு














காதலெனும் பேர்கொண்டு
காமம் அலையுமிங்கு
கவனமாக இருந்திடுங்கள்
கற்பினை காத்திடுங்கள்!

காதலுடன் காமம் ஆடும்
கண்ணாமூச்சியாட்டம்
கணநேர தடுமாற்றம்
கொண்டு வரும்
தொங்கோட்டம்!

சுகித்த கணங்களெல்லாம்
சுமையைத்தான் கொண்டுவரும்!
சில வேலை
உன்னையும்தான் எமலோகம்
கொண்டுபோகும்!

மனது படபடக்க
அடிவயிறு தான் கனக்க
எரியாமல் எரியும்
அச்சத்தீ உன்னுள்ளே!

குட்டிபோட்டபூனையாவாய்
குறுக்கும் மறுக்கும் நடப்பாய்
குட்டி உன்னுள் வளர்வது
அறிந்தால் சாகவும் எத்தனிப்பாய்!

வீட்டிற்கு தெரியவந்தால்
விட்டத்தில் தொங்கும்
அப்பாவின் சடலம்
தோட்டக்கிணற்றில் மிதக்கும்
அம்மாவின் உடலம்!

தங்கைகள் வாழ்க்கை
வளைந்து வினாக்குறியாகும்
தம்பிகள் தலை குனிய
காரணமுமாகும்!

சிற்றுயிர் கொண்டு நீ
பேருயிர் காக்கவேண்டும்
குற்றுயிர் நீ கொண்டு
அனுதினம் துடிக்கவேண்டும்!

பதற்றப்படுத்தியவன்
பதறித்திரிவான்
செய்வது அறியாது
ஏதேதோ பிதற்றுவான்!

ஒருநாளும் இல்லாமல்
துள்ளிக்குத்து அம்மாவிடம்
அகப்படுவாய்

அன்னாசிப்பிஞ்சை
அருவருக்க தின்னவேண்டும்
அஸ்பிரின் குளிசை போட்டு
அல்சரால் அலற வேண்டும்!

தலையில் அடித்துக்கொண்டு
நிலையின்றி தவிக்கவேண்டும்
கலைப்பதக்கு மாத்திரைகள்
வகை வகையாய் உண்ண வேண்டும்!

பொய்சொல்லி வீட்டை விட்டு
போய்க்கலைக்க வேண்டும்
நோய்த்தொற்றை நீ வாங்கி
இறக்க வேண்டும்!

கறல் பிடித்த ஆயுதம்
இருள் படிந்த ஓரிடம்
உயிர்கொலை செய்யணும்
இறை சாபம் அடையணும்!

ஆக
மகளே
நிலைத்திரு அன்பில்
தள்ளிவை காமம்
சொல்லிவை அவனை
காத்திரு மணமாலை
கனிந்திடும் வரும்வேளை!


                 -உமர் அலி முகம்மதிஸ்மாயில்


0 கருத்துக்கள்:

Post a Comment