நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Wednesday, March 5, 2014

நிழல்!













நிழல்

உனது உருவத்தையே
பிரதிபலித்தாலும்
நிழல் 
உனக்கு சொந்தமில்லை !

நிழலுக்கு யாரும்
வெட்டினாலும்
வலிப்பதில்லை
குருதி வடிவதுமில்லை!

புலன்களில்லாத
போலி அது
பலன்களில்லாத
வாலுமது!

உன்செய்கையை
பிரதி பண்ணும்
நிழலுக்கு
என்றும்
உன் பெயரில்லை
அதை
நிழல் என்றுதான்
அழைப்பர்!

உனது காலடியிலே
விழுந்து கிடக்கும்
நிழல்
உன்னை விட்டுப்பிரிய
மனமின்றி
கட்டிக்கொண்டு
அழுவது
தெரியுமா உனக்கு?

உதறினாலும்
விடுகின்றதில்லையே
அதட்டினாலும்
அகன்று
செல்லுதில்லையே!

நீ பார்க்கும்
உனது நிழல்!
உனைப்பார்க்குமா?

இருட்டிலும்
உன்னை அது
தொடர்கின்றது
உன்னால்தான்
அதை பார்க்க
முடிவதில்லை!

ஒளியின் கீழே
சரியாய் நின்றால்
உனக்குள்
மறையும் நிழல்!

இறை அருளை
அள்ளிப்பருக
விலகும்
உன் மன இருள்!

உமர் அலி முகம்மதிஸ்மாயில்!

0 கருத்துக்கள்:

Post a Comment