நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Thursday, March 6, 2014

தேடினேன்!






















தேடினேன்!

முன்னும் பின்னும்
தேடினேன்
வலமும் இடமும்
தேடினேன்!

மேலும் கீழும்
தேடினேன்
விண்ணிலும் மண்ணிலும்
தேடினேன்
இருளிலும் ஒளியிலும்
தேடினேன்
இரவும் பகலும்
தேடினேன்!

அங்கும் தேடினேன்
இங்கும் தேடினேன்
எங்கும் நீ கிடைக்கல!

ஆனால்
எனக்குள் மட்டும் தேடல
அப்போ நீ
எனக்குள் இருந்தது புரியல!

உமர் அலி முகம்மதிஸ்மாயில்
2014 march 6th

0 கருத்துக்கள்:

Post a Comment