நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Wednesday, March 26, 2014

கவிஞர் கண்ணதாசன்





பளிங்கு கோப்பையில்
பழரசம் காட்டினாய்
நளினக் கவிதையால்
பரவசமூட்டினாய்!

தங்கத் தமிழை தட்டித்தட்டி
நீ நகை செய்தாய்
சிங்கப் பாணியில் தவறை
தமிழால் நீ தட்டிக்கேட்டாய்!

உலகை உன் ஆறாம் விரல்
உருவகித்தது
மனதின் துயர் ஆறும் பணியை
அது புரிந்தது!

வித்துக்கள் முளைத்து
உன் வரியில்
தத்துவ மரங்கள் கிளை பரப்பின!

பெண்ணை வரிகளால்
துகிலுரித்தாய்
கண்ணை கவிதையால்
திறந்து வைத்தாய் !

எதிரியை சொல்லீட்டிகள்
குத்தின
வாயம்புகள் வைதன!
புத்திகள் கூறியே
இயம்பியா வரிகள் ..

தமிழன்னைக்கு நீயொரு
முத்தினை வென்ற
புது நகைச்சொத்து !

0 கருத்துக்கள்:

Post a Comment