நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Sunday, March 30, 2014

நாகரிக ஆடை
















விரலுக்கு தொப்பி
தலைக்கு மோதிரம்

குனிஞ்சால் கிழியுது
நெளிஞ்சால் பிடிக்குது!
நூலிலே தொங்குது
நுனியாலே தாங்குது!

வெயிலுக்கு கருப்பு
தேவலாம சுருக்கு!
ஒயிலுக்குள் நனைத்து
உசத்தினாப்போல
சிலுக்கோட,பளபளப்பு!

வெற்றுப் பைகள்
வேண்டாத கைகள்!
உற்றுப்பார்த்தால்
எல்லாமே சைபர்!

ஓட்டையில்லாமல் சில
பொத்தான் இருக்குது
சட்டையை மாட்டினா
மூச்சும்தான் முட்டுது!

தம்பியின் சட்டையை
தமக்கை போடுறாள்
தங்கையின் சட்டையை
அண்ணனும் போடுறான்!

அளவோட மூடினா
அறியாமை என்கிறான்!
நிலவுக்கு கூட
ஒப்பிட்டு பேசுறான்!

இடுப்பிலே இருக்காம
நழுவி விழுகுது
வீதியில் நடந்தால்
தரையையும் தழுவுது!

மூடி எல்லாம்
திறந்திரிக்கி
ஆடை எல்லாம்
குறைஞ்சிருச்சி!

துண்டுத்துணியில்
துகிலினைக்கொண்டு
நண்டுக்கு சட்டை
கட்டினால்போல
பெண்டுகள் எல்லாம்
ஓடித்திரியுது!

நாறிய மீனிலே
மொய்க்கிற ஈபோல்
ஊரில உள்ளவன்
கண்ணெல்லாம்
அவ மேல் !

அந்தக்காலத்து "சலாரு"
போல இந்தக்காலத்து
பெடியங்கள் அலையிறான் பாரு !

வாலெல்லாம் தொங்குது
கோலம் குறைஞ்சி
அவலமாய் தெரியுது!

ஆளுக்கு இல்லே ஆடை
ஆடைக்குத்தனே ஆளு!
நாளுக்கு நாள் மாற்றம்
பீடை பிடித்ததோர் கூட்டம்!

0 கருத்துக்கள்:

Post a Comment