உயிர் புரிந்த குற்றம்
உடல் ஏற்றும் சட்டம்!
உயிர் மேலே உயர்கிறது
உடல் கீழே வீழ்கிறது!
உதாரணத் தண்டனை
இது காரணத் தண்டனை!
தூக்குமேடை தூங்கிவிட்டால்
உலகில் பாவப்பூக்களே பூக்கும்
பிணங்களே மணக்கும்!
கொல்லும் தண்டனை
கொல்லும் உலகில் நிந்தனை !
சொலும் சேதிகள்
உலகில் எத்தனை?
பிறருரிமை கொன்றவனின்
வாழுரிமை இறக்கும்!
பிறருரிமை கொள்ளாது
பூவுலகை காக்கும்!
இது "அலுகோசு"செய்யும்
குற்றமற்ற கொலை!
கொடூரத்திற்கு
சட்டத்தின் விலை!
முறிந்த பேனா எழுதிய
தீர்ப்பு !
கருணை கண்கட்டி
காதடைத்து செய்யும் வதம்!
கவிதை வயலுக்கு 9 MARCH 2014 அன்று எழுதியது
0 கருத்துக்கள்:
Post a Comment