நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Sunday, March 9, 2014

தூக்குமேடை!





உயிர் புரிந்த குற்றம்
உடல் ஏற்றும் சட்டம்!

உயிர் மேலே உயர்கிறது
உடல் கீழே வீழ்கிறது!

உதாரணத் தண்டனை
இது காரணத் தண்டனை!

தூக்குமேடை தூங்கிவிட்டால்
உலகில் பாவப்பூக்களே பூக்கும்
பிணங்களே மணக்கும்!

கொல்லும் தண்டனை
கொல்லும் உலகில் நிந்தனை !
சொலும் சேதிகள்
உலகில் எத்தனை?

பிறருரிமை கொன்றவனின்
வாழுரிமை இறக்கும்!

பிறருரிமை கொள்ளாது
பூவுலகை காக்கும்!

இது "அலுகோசு"செய்யும்
குற்றமற்ற கொலை!

கொடூரத்திற்கு
சட்டத்தின் விலை!

முறிந்த பேனா எழுதிய
தீர்ப்பு !

கருணை கண்கட்டி
காதடைத்து செய்யும் வதம்!

கவிதை வயலுக்கு  9 MARCH 2014 அன்று எழுதியது

0 கருத்துக்கள்:

Post a Comment