நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Monday, March 17, 2014

சுமை சுழலிடம்














தோழில் சுமை
இடையில் சுமை
நடையில் சுமை
மனதிலும் சுமை முழு
வாழ்விலும் சுமை!

இறக்கி வைக்க
இடமில்லை
எல்லா இடமும்
சுமைதானே !

குடலின் பசியை
கழுவிடவே
வியர்வைக்
கடலில் குளிக்கின்றாள்
வெய்யில் மழையில்
நனைகின்றாள்!

கையில் பச்சைக்
குழந்தைக்கு
பள்ளிப்பாடம் நடத்துகிறாள்

கையை ஏந்திக் கேட்காமல்
கையில் ஏந்தி விற்கின்றாள்
மெய்யில் மட்டும் திறனில்லை
மனமும் திறனால்
துணைகொண்டாள்!

சுமைகளால் இவள்
வளையவில்லை
சுமக்கும் சுமையே
வளைகிறது!

இரப்பது இழிவு
இருப்பதை கொண்டு
நீ வாழ் இனிது!

இடுக்கண் வேளை
நடுக்கம் வேண்டாம்
ஒடுங்கிப் போனால்
வீழ்த்திடும் ஆளை 
நடுங்கிப்போனால் 
நீ வெறுங்கோழை!

தினமும் நீ எழு காலை
மனமும் இறை
தொழுதிடும் வேளை!

முயன்றும் தோற்றார்
மிகவும் அற்பம்
முயலார் வென்றார்
அதிலும் சொற்பம்!

சுழலிடம் ஒன்றல்ல
ஓன்றுக்கு மேலுண்டு
வாழ்விடம் கற்றவை
நீ அறி கண்டு !

17 MARCH    2014 அன்று கவிதை வயலுக்கு எழுதியது.

0 கருத்துக்கள்:

Post a Comment