நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Thursday, March 27, 2014

நெருப்பு












நெருப்பே நீ
நீரின் காதலியோ ?

கடல் தவிர
யாவுமே உன் அடிமையோ?

செந்நாக்கு சீறி உன்
சினத்தினைக் காட்டுகிறாய்
முன்னிற்கும் எதையுமே நீ
பொசுக்கிக் கருக்குகிராய் !

பலவர்ண ஜாலம்
உன் உடல்
பலமான புண் தரும்
உனைத்தொடல்!

உஷ்ணம் உன் பிள்ளை
உருகிடும் சாம்பலே
உமிழ்நீர்!

உனக்கு வியர்ப்பதில்லை
உன்னருகிலுள்ளோர்கே
வியர்க்கும்!

நீ உறங்குவது
தணலாக
உன்போர்வையோ
நீறு !

பசிவந்தால்
யாவுமே புசிப்பாய்
அனைத்தையும்
அப்படியே சமிப்பாய்!

புனலுன்னை
புணரும்வரை
உன் ஆசை தீராது
புஸ்சென்று அடங்கிடுவாய்
புனுலுன்மேல் படர்கையிலே !

நெருப்புப் பெண்ணே
ஈரவிறகு
உன் நாக்கு
கோபக்கனல்பட்டு
எரிந்ததனால்
உமிழ்ந்த நெருப்பு
என் நெஞ்சை
புண்ணாக்கியதே!!

0 கருத்துக்கள்:

Post a Comment