நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Monday, March 31, 2014

கல்லறை !









பாதியில் முடியாத
பயணம்
மீதியும் தொடருது
நாதியும் இல்லா
சாதியையும் இல்லா
துயரம்!

இருட்டுக்க போறேன்
குருட்டுக் கண்ணோட
திருடன் பயமில்ல
திருட்டுக்கொடுக்க கையில்
எதுவுமே இல்ல!

நான்பற்றி நடந்த
கைத்தடி கூட
என்னோடு இல்ல
சுருட்டிய கைக்குள்ள
ஒண்ணுமே இல்ல!

கூட்டாளி துணையில்லை
பாட்டாளி பணக்காரன்
பேதமும் இல்ல
எல்லாரும் போகணும் !

மின்சாரம் அங்கில்ல உன்
சம்சாரமும் தான் இல்ல
நற்செயல்கள் விளக்கேற்றும்
கொடும்பாவம் அடுப்பெரிக்கும்!

உள்ளுக்கு போனது
வெளியால வரல
வெளியால உள்ளது
உள்ளுக்கும் போகல!

குத்திய விழி
திக்கித்து நிக்குது
கத்திக்குளறி
ஒப்பாரி நடக்குது!

பிள்ளை அழுவான்
காரியம் மட்டும்
மனைவி அழுவாள்
கடைசி மட்டும்!

உறவுக்காரங்க
ஓரத்தில் நிக்காங்க
ஊருக்காரங்க
தூரத்தில் நிக்காங்க!

சந்தணக்குச்சி
புகைந்தழுகுது
உந்தன் தங்கச்சி
விம்மியழுகிறா
உன்ன நினைச்சி!

நந்தவனமா
நரகக்குழியா
நீபோகிற வீடு
நீ நன்றாயறிவாய் !

நந்தவனத்தில்
வாழ்வது என்றால்
நன்மைச்செடிகளை
அதிகமாய் நடு
பாவக்களைகளை
களைந்து நீ அடிக்கடி எடு!

கங்கு நெருப்பும்
காத்திக்கிருக்கு
தீங்கு செய்
மானிடன் உனக்கு!

மிருகத்தைககொன்று
மனிதனாய் வாழு
மனதினை வென்று
நல்வினை நாடு!

வழுக்களில் வீழ்ந்து
அழுந்தி விடாதே
புழுக்களின் உணவாய்
நீ மாறிவிடாதே!

Mohamed Ismail Umar Ali

0 கருத்துக்கள்:

Post a Comment