நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Saturday, March 8, 2014

கனாக்காணும் வயது !















பதின்ம வயது

உணர்வுகள் கலவையாய்
கலந்து
உணர்வுகள் புதிதாய்ப்
பிறக்கும் வயது!

புரியாததெல்லாம்
புரிந்ததென்று
பெரிதாய்
பீத்திக்கொள்ளும் வயது!

பூத்திருக்கும் வயது
காத்திருக்கும் வயது
எதிர் பார்த்திருக்கும் வயது!

பிரியவே மாட்டோம் என்று
புரியாமல்
பெரிய பெரிய
சத்தியம் செய்யும் வயது!

வீட்டுக்குத் தெரியாமல்
திருட்டிலே
சித்துக்கள் புரியும் வயது!

துள்ளிக்குதிக்கும் வயது
அன்பை
அள்ளிப்பருகும் வயது!

நண்பர்கள்
கடவுளாகும் வயது
கவிதைகள் நண்பராகும்
வயது!

மீசையும் ஆசையும்
அரும்பும் வயது
இசையும் கலையும்
ரசிக்கும் வயது!

கனநேரம் நீ நிற்பாய்
கண்ணாடியின்
முன்னாடி
கண நேரம் சிந்திப்பாய்
சிந்தனையில்
தள்ளாடி !

ஒற்றைக்காலில் நின்று
கேட்டதை
பெற்றுக்கொள்ளும் வயது!

பாடப்புத்தகம் கசந்து
கவிதைப்புத்தகங்கள்
இனிக்கும் வயது!

சோதனை செய்யும் வயது
அதிகம்
சாதனைகள் செய்யும் வயது!

ஏமாற்றங்கள் தாங்காத வயது
எதிர்பார்ப்பதை எண்ணி
தூங்காத வயது!

சோதனைகள் தாங்காமல்
சாவதனை விரும்பும் வயது!

பூஞ்செடிகள் வளர்ப்பார்
நெஞ்சினிலே காதல்
வளர்ப்பார்!

பொல்லாத வயது
நிலத்தில்
நில்லாத வயது!

0 கருத்துக்கள்:

Post a Comment