நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Saturday, March 29, 2014

கண்ணாடி!







கண்ணாடி!








நீ எனில் உனைப்பார்க்கிறாய்
பிறர் உனில்
உன்னைப் பார்கிறார் !

முகம் மட்டும் காட்டுவேன்
உன் அகம் கூட தோற்றுவேன் !

உருப்பெருக்கத் தெரியாது
ஓரவஞ்சனை கிடையாது
உள்ள(த்)தை உள்ளபடி
ஒப்புவிக்கும் உளவாளி!

நான் சிதைந்தால்
நீ சிதறித் தெரிந்திடுவாய்
நான் முகம்அழுதால்
நீ அழுக்காக தெரிந்திடுவாய் !

உன் முகத்தின் அழகைப்பார்க்க
என் முன் சிரி
உன் சோகத்தின் கோரம் காண
என் முன் அழு!

சடத்தின் நடத்தை
என் சட்டத்தில் அடங்கும்
உள்ளக்கடலின் எண்ண
அலைகளின் தளம்பலும்
என்னிலே புரியும்?

சிரிப்பவன்
உள்ளே அழுவது கூட
முகத்திலே தெரியும்?

அழுபவன்
அவனுள்ளே சிரித்து
மகிழ்வதும்
தன்னாலே புரியும்?

உளவியல் கல்வியில்
ஒப்பில்லா உபயோகம்
உன் முகமே
உன் உளம் காட்டும் கண்ணாடி!

                                   Umar ali Mohamed ismail

0 கருத்துக்கள்:

Post a Comment