நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Wednesday, March 12, 2014

விலைவாசி


















சின்னப்பயலே சின்னப்பயலே
சேதி கேளடா !

நாம் வாழும் உலகின் 
நிலையை நீயும் 
எண்ணிப்பாரடா!
எண்ணிப்பாரடா!

இலையும் உதிருது 
விலையும் எகிறுது 
நாளாந்தம் நடக்கும்
நிகழ்ச்சி!

நிலையம் தளருது 
தலையும் சுழலுது 
தினமும் நடக்குற 
காட்சி !

உலையும் கொதிக்குது 
உளமும் கொதிக்குது 
நானும் உங்கள் 
கட்சி!

சோறு புழுங்கும் அடுப்பில் 
அதனோடு சேர்ந்து 
நானும் புழு க்குகிறேன் 
மன இடுக்கில்! 

உழைத்துக் களைத்த 
ஏழைகளுக்கு அரசு கொடுக்குது 
அதிர்ச்சி 
செழித்து வளர்ந்த 
கோழைகளுக்கோ இதனாலே 
மகிழ்ச்சி!

இரவின் நடுவினில் 
பொருளின் விலையினில் 
உயர்ச்சி !
இதை தாண்டியும் வாழ 
நீ எடுக்கணும் கடும் 
முயற்சி!

அடிப்படை சாதனம் 
மாடிப்படி ஏற 
படிப்படியாக சாமான் விலை
அதில் குடியேற 

தட்டுத் தடுமாறி 
நானுமிங்கு வாழ தட்டிக்கழிக்கின்றேன் 
விட்டுக்கொடுக்கின்றேன் 
மனக்கிடங்கின் ஆசைகளை!

போட்டுக்கழித்த
ஆடைகளை கிளியல் 
பொத்திப் போடுகின்றேன்!

ஓட்டை உடைசல் 
பாத்திரத்தை 
பத்திரமாய் பாவிக்கிறேன்!

மருந்து மாயங்கள் 
விருந்து வெகுமதிகள் 
அருந்தும் பானங்கள் 
சுருக்கி வாழுகிறேன் !

பழஞ்சோறும் பழங்கறியும் 
சுவைக்கின்றேன் 
நடந்துபோகும் தூரத்தை 
நடந்தே அடைகின்றேன்!

மண்மலை வளரவில்லை 
விலை மலை வளர்கிறது 
மலைபார்த்து தினமும் 
குரைக்கின்ற நாயானேன்

கவிதை வாழி  75 அவது கவிதைக்கு  MARCH 12 அன்று எழுதியது.

0 கருத்துக்கள்:

Post a Comment