நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Saturday, March 22, 2014

காத்திருப்பேன்

என் இதயம் துடிக்கும் வரை
என் மூச்சு நிற்கும் வரை 
என் குருதி ஓடும் வரை 
உனக்காக காத்திரிப்பேன் !

பூங்காற்று வீசும் வரை
தென்னங்கீற்று அசையும் வரை
மூங்கில்கள் இருக்கும் வரை 
வண்ணத்தி என் வாசலில் 
வண்ணச் சிறகடிக்கும் வரை 

நீ வீடு வந்து சேரும் வரை
நான் உனைச் சேரும்வரை 
தூங்கினாலும் விளித்திரிப்பேன் 
உண்டாலும் பசித்திருப்பேன் 
உனக்காக காத்திருப்பேன்

கவிதை வயலுக்காக  22 APRIL 2014 அன்று எழுதியது 

0 கருத்துக்கள்:

Post a Comment