நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Tuesday, April 1, 2014

தொலைந்த மலேசிய விமானம்















சவால் விட்ட
மானிடனே
சாட்டையடி பார்த்தாயா?

நீயல்ல செலுத்துவது
நானேதான் என்று சொல்லி
நமையெல்லாம்
அவன் பெயரை உச்சரிக்க
செய்தானே!

விஞ்ஞனம் தேடியது
பலனேதும் கிடைக்கவில்ல
பலகோணம் படப்பிடித்து
தெளிவேதும் அடையவில்லை!

எல்லாமே முடிந்தபின்னர்
அவன் மட்டும் தானறிவான்
பெருமூச்சும்
பேச்சும் ஒன்றை ஒன்று
பிணைந்து கொண்டு
பிறக்கின்ற சொல்!!

விளையாட்டில் மாட்டி
விடையறியா
வினாவான
பயணிகளின் குடும்பத்தார்
மனமாற
பிரார்த்திப்போம்

அண்மையில் மறைந்த மலேசிய விமானத்தின் நினைவாக எழுதி கவிதை வயலில் பிரசுரித்தது!

0 கருத்துக்கள்:

Post a Comment