நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Sunday, January 12, 2014

மின்னல்



வானக்குளத்திலே 
வெளிச்சக்கல் எறிந்தது யார்?

மேக மரம் வளர விட்ட 
வெளிச்ச வேர்களைப்பார்!

தொடவந்த காதலனை
நெருங்காதே என்று சொல்லும்
ஒளிச்சாட்டை அடியைப்பார்!

பஞ்சும் பஞ்சும்
பட்டபோது பளிச்சென்று
பற்றுகின்ற கீற்றைப்பார்!


- உமர் அலி முகம்மதிஸ்மாயில் -


0 கருத்துக்கள்:

Post a Comment