Wednesday, January 8, 2014
அரை நிலா
அடைபட்டுக்கிடந்து
அலுத்துப்போக
அறையின்
திரையை விலக்கினேன்
அங்கே ஒரு
அடியும் இல்லா
கைப்பிடியும் இல்லா
கிண்ணம் கண்டேன்
ஆடவில்லை
அசையவில்லை
நிரம்பி வழிந்த ஒளி
ஒழுகுகிறது வானத்தில்!
அலுத்த மனதிற்கு
ஆறுதல் சொல்கிறது
உள்ளக்குலந்தைக்கு
ஆரிரரோ பாடுகிறது!
ஆம் அரை நிலா
இருளில் குளிக்கிறது
நட்சத்திரங்கள்
ஒளித்திருந்து காண்கின்றன!
-உமர் அலி முகம்மதிஸ்மாயில்
Subscribe to:
Post Comments (Atom)
0 கருத்துக்கள்:
Post a Comment