ஏனெனில் நான் கவிஞன்
பகுதி -1
எனக்குள் ஒரு ஆறாம் புலன்
ஆறுதலாக அடங்கிக் கிடக்கின்றது
அருவிகள் கொண்டுவரும் அது
ஆறாகவும் பெருக்கெடுத்து
ஓடுகிறது !
அதற்கு
காற்றும் இலைகளும்
நேற்றைப்பற்றி
கலகலப்பாக பேசுவது
தெளிவாகக் கேட்கிறது!
தென்றல் என்னைத்தடவி
அந்த நல்லசெய்தியை
மெல்லச் சொல்லிவிட்டுச்செல்வதும்
புரிகிறது!
மலரும் வண்டும் காதலித்து
கட்டிப்புரளும்போது
பேசும் இரகசியமும் எனக்கு
கேட்கிறது!
அல்லியும் ஆம்பலும்
அமாவாசையன்று
அழும் ஓசையும்
அப்படியே கேட்கிறது !
வில்லால் அடிபட்ட
தன் ஒற்றைக்கிளியின்
சிறகு ஊனமுற்றதைப்பார்த்து
சோடிக்கிளியில் ஒன்று
சோகமாய் பேசுவது
செவிவழியே விழுந்து
என் உள்ளத்தை கொல்கிறது!
தொடரும்......................
மு.இ.உமர் அலி
நிந்தவூர் -2014 July 19
பகுதி -1
எனக்குள் ஒரு ஆறாம் புலன்
ஆறுதலாக அடங்கிக் கிடக்கின்றது
அருவிகள் கொண்டுவரும் அது
ஆறாகவும் பெருக்கெடுத்து
ஓடுகிறது !
அதற்கு
காற்றும் இலைகளும்
நேற்றைப்பற்றி
கலகலப்பாக பேசுவது
தெளிவாகக் கேட்கிறது!
தென்றல் என்னைத்தடவி
அந்த நல்லசெய்தியை
மெல்லச் சொல்லிவிட்டுச்செல்வதும்
புரிகிறது!
மலரும் வண்டும் காதலித்து
கட்டிப்புரளும்போது
பேசும் இரகசியமும் எனக்கு
கேட்கிறது!
அல்லியும் ஆம்பலும்
அமாவாசையன்று
அழும் ஓசையும்
அப்படியே கேட்கிறது !
வில்லால் அடிபட்ட
தன் ஒற்றைக்கிளியின்
சிறகு ஊனமுற்றதைப்பார்த்து
சோடிக்கிளியில் ஒன்று
சோகமாய் பேசுவது
செவிவழியே விழுந்து
என் உள்ளத்தை கொல்கிறது!
தொடரும்......................
மு.இ.உமர் அலி
நிந்தவூர் -2014 July 19
0 கருத்துக்கள்:
Post a Comment