அழகான கனவு கண்டு
ஆழமாய்த் தூங்கிய என்னை
கலவரமாம் எனகூறி
திடீரென தட்டி எழுப்பினாங்க
திடுக்கிட்டு எழுந்த நாளாய்
திரும்ப நினைக்கின்றேன்
அந்த அழகிய தோப்புக்குள்ளே
புரண்டும் படுக்கின்றேன்
கிறுக்கிக் கிழிக்கின்றேன்
முழையில் கருகிறது
முடிச்சுப்போய் முடியாமல் நிற்கிறது
தோற்றுத் திரும்புகிறேன்
கவிதைக் கானகத்தில்
காலடி வைக்காமலே!
Subscribe to:
Post Comments (Atom)
0 கருத்துக்கள்:
Post a Comment