இப்படியும் நோன்பு..............!
........................................ நாலைந்து கறிகளுடன் மாடிகளில் தலை நோன்பு பழஞ்சோற்று கரையலோடு குடிசைகளில் அதே நோன்பு! ஒருவீட்டில் ஆட்டிறைச்சி , அவித்தகோழி இன்னும்பல இத்யாதி வட்டிலப்பம் இறுதியிலே குடில்வீட்டில் முட்டையொன்றுடைச்சி ஊத்திப்பொரிச்சி முழுக்குடும்பமும் உண்ணுதங்கே இது இயற்கை செய்த விதி! இருவர் வீட்டிலும் நோன்புதான் பலவகை உண்டவர்க்கு பலமடங்கு நன்மையில்லை பழஞ்சோறு உண்டவர்க்கு பலனிலே குறையில்லை இது இறைவனின் மாண்புதான் ! மூக்குமுட்ட உண்டுவிட்டு தூங்குவது நோன்பிலை ஆக்கி மூட்ட சோறு திண்டு பாங்கு சொல்ல முன் உறங்குவதிலும் மாண்பிலை! மு.இ.உமர் அலி தலை நோன்பு-2014 june 2 |
Saturday, June 28, 2014
இப்படியும் நோன்பு..............!
Subscribe to:
Post Comments (Atom)
0 கருத்துக்கள்:
Post a Comment