status.அன்று அப்பாவின் மாரடைப்பு
இன்று
அம்மாவின் மூச்சடைப்பு
பிடித்துத்தள்ளியதே எங்களை
நடு வீதியிலே!
குடிசையும் நாங்களும்
கொடுகிக் காய்கிறோம்
எதிர்காலம் தெரியாமல்
நடுங்கித்தேய்கிறோம்
நாங்கள்
யுத்த களம் பெற்றெடுத்த
அகதிப்பிள்ளைகள்
அயல்நாட்டில் இன்று
யாருமில்லா
அனாதைப்பிள்ளைகளாக!
நேற்று முழுக்க வலி
இன்றும்வலி
நாளை எந்த வழி
யாரறிவார் எம் உளவலி?
Monday, June 23, 2014
Subscribe to:
Post Comments (Atom)
0 கருத்துக்கள்:
Post a Comment