விழி !
நான் அதை மான் ஓடும்
காடென்பேன்
மீன்வாளும் தெளிந்த
குளமென்பேன்
போராடும் கூர் வாளென்பேன்
பார்வையை எறிகின்ற
வேலென்பேன்
மருண்டோடும்
மான் என்பேன்
உருண்டோடும்
தேர் என்பேன்
மழை பொழியும்
வான் என்பேன்
வழிந்தோடும்
ஆறும் என்பேன்
தவித்துத்
துடிக்கின்ற மீன் என்பேன்
விரிந்து மீன் பிடிக்கும்
வலை என்பேன்
சுட்டெரிக்கும்
கனல் என்பேன்
அறியாமை இருளகற்றும்
ஒளியின் கண் என்பேன்!
உள்ளங்கள் இணைக்கின்ற
நூலென்பேன்
நெஞ்சம் கவர்ந்திழுக்கும்
கள்ளக் காந்தமென்பேன்
அன்பாய் அணைக்கின்ற
கரம் என்பேன்
சதிசெய்து வீழ்த்துகின்ற
பொறி என்பேன்
உள்ளப்பூங்காவின்
வண்ண வண்ண புஷ்பங்களை
அள்ளிச்சொரிகின்ற
பொய்கை என்பேன்!
தண்ணீரில் மிதக்கின்ற
வெண்தாமரை மலரென்பேன்
விண்ணிலே நீந்துகின்ற
தண்மதிஎன்பேன்!
மண்ணிலே உயிர்வாழும்
தாரகை
கண்ணிலே உள்ளது
மதுபோதை
கல்லெறிந்து அது கொடுக்கும்
தண்டனை
சொல்லாமல் அது சொல்லும்
பசி செய்யும் நிந்தனை
பயிர்ப்பை பயிரிட்டு
பயத்தையும் படம் காட்டும்
உயிர்ப்பு உள்ள விழி
உயிர்போயின் உண்மையை
நிலை நாட்டும் !
கோட்டைகள் பிடித்திடும்
சிலவேளை
சாட்டையடியும் கொடுத்திடும்
அதேவேளை
களவினை காட்டிக் கொடுப்பதும்
அதன் வேலை !
காறாமல் உமிழ்வது
கண்தானே நிறம்
மாறாமல் அது வாழ்வதும்
நிஜம்தானே
புன்னகை செய்யும்
பளிச்சென்று
தருணத்தில் மன்னரை வீழ்த்திடும்
அது பூச்செண்டு!
எண்ணிலா உவமையுண்டு
ஒரு கண்ணிலே
பல கதையுமுண்டு
வெண்ணிலா மனதில் புதையுண்டு
நெஞ்சிலாடுது நிதம் நிண்டு!
மு.இ.உமர் அலி
2014 june 26 — with Mansoor A Cader, Govind Dhanda, Camer Rila and 44 others.
நான் அதை மான் ஓடும்
காடென்பேன்
மீன்வாளும் தெளிந்த
குளமென்பேன்
போராடும் கூர் வாளென்பேன்
பார்வையை எறிகின்ற
வேலென்பேன்
மருண்டோடும்
மான் என்பேன்
உருண்டோடும்
தேர் என்பேன்
மழை பொழியும்
வான் என்பேன்
வழிந்தோடும்
ஆறும் என்பேன்
தவித்துத்
துடிக்கின்ற மீன் என்பேன்
விரிந்து மீன் பிடிக்கும்
வலை என்பேன்
சுட்டெரிக்கும்
கனல் என்பேன்
அறியாமை இருளகற்றும்
ஒளியின் கண் என்பேன்!
உள்ளங்கள் இணைக்கின்ற
நூலென்பேன்
நெஞ்சம் கவர்ந்திழுக்கும்
கள்ளக் காந்தமென்பேன்
அன்பாய் அணைக்கின்ற
கரம் என்பேன்
சதிசெய்து வீழ்த்துகின்ற
பொறி என்பேன்
உள்ளப்பூங்காவின்
வண்ண வண்ண புஷ்பங்களை
அள்ளிச்சொரிகின்ற
பொய்கை என்பேன்!
தண்ணீரில் மிதக்கின்ற
வெண்தாமரை மலரென்பேன்
விண்ணிலே நீந்துகின்ற
தண்மதிஎன்பேன்!
மண்ணிலே உயிர்வாழும்
தாரகை
கண்ணிலே உள்ளது
மதுபோதை
கல்லெறிந்து அது கொடுக்கும்
தண்டனை
சொல்லாமல் அது சொல்லும்
பசி செய்யும் நிந்தனை
பயிர்ப்பை பயிரிட்டு
பயத்தையும் படம் காட்டும்
உயிர்ப்பு உள்ள விழி
உயிர்போயின் உண்மையை
நிலை நாட்டும் !
கோட்டைகள் பிடித்திடும்
சிலவேளை
சாட்டையடியும் கொடுத்திடும்
அதேவேளை
களவினை காட்டிக் கொடுப்பதும்
அதன் வேலை !
காறாமல் உமிழ்வது
கண்தானே நிறம்
மாறாமல் அது வாழ்வதும்
நிஜம்தானே
புன்னகை செய்யும்
பளிச்சென்று
தருணத்தில் மன்னரை வீழ்த்திடும்
அது பூச்செண்டு!
எண்ணிலா உவமையுண்டு
ஒரு கண்ணிலே
பல கதையுமுண்டு
வெண்ணிலா மனதில் புதையுண்டு
நெஞ்சிலாடுது நிதம் நிண்டு!
மு.இ.உமர் அலி
2014 june 26 — with Mansoor A Cader, Govind Dhanda, Camer Rila and 44 others.
0 கருத்துக்கள்:
Post a Comment