அநீதியும் அகம்பாவமும்!
பாதி கடித்த பழங்களெல்லாம்
முழுக்க மூடிய தொட்டிகளில்
கிடந்தது அழுகுகின்றன
அளையாத
அன்னப்பற்பருக்கைகள்
குலையாமல் ஈக்களுக்காகவும்
ஏறும்புகளுக்காகவும்
இறைந்து கிடக்கின்றன
அத்தனை
சிறிய வயிறுகளுக்கு
எத்தனை பெரிய ஓரு விருந்து
அரைவாசி அருந்திய
பானங்கள்
அவலகாட்சிகளை
பிரசவிக்கின்றன!
இங்குள்ள
பூனைகள் எல்லாம்
நன்றாகக் தின்று
கொழுத்திருக்கின்றன
அவற்றிற்கு கொலஸ்டரோல்
கூட சற்று அதிகமாகவே
இருக்கும் என நினைக்கிறேன்.!
இந்த தேசம்
பசியால் படையடுத்தவர்களின்
ஊழியச்சாலை
இங்குள்ள குடிமக்களுக்கு
பசி என்றால் என்ன என்று படிப்பிப்பது
பிரம்ம பிரயத்தனமாக இருக்கிறது !
இப்போது நாங்களும் தற்காலிகமாக
இவர்களைப்போல
நடந்து கொள்கிறோம்
இல்லை
நடித்துக்கொள்கின்றோம்!
பசிக்க முதலே
புசிக்கிறார்கள்
தகிக்க முன்னரே
குடிக்கிறார்கள்
நமக்கெல்லாம்
தூக்கம் இரவில்
இவர்களுக்கு
இரவோ பகலில்!
பட்டிணிச்சாவால் பல
மானுட சாம்ராஜ்யங்கள்
சரிந்து
சாம்பலாகிக்கொண்டிருக்கும்
வேளையில்
கொட்டிக்குவிக்கிறார்கள்
உணவை கழிவு மலைகளாக
மனித நேயத்தை
குழிவெட்டிப் புதைத்தவர்கள் !
இந்தவூரின்
ஈக்காக்கைகளுக்கு இருக்கும்
பாக்கியம்கூட
அந்த ஆட்களுக்கு இல்லையே
இங்கே அறுசுவை உணவும்
உண்டியும்
அங்கே ஒருசுவையும் இன்றி
கஸ்டப்பட்டே சுரக்கின்ற
உமிழ்நீரை ஒன்றுக்குமேல்பட்ட தடவைகள்
விழுங்கி விழுங்கியே
அழிந்து போகும் ஆன்மாக்கள்!
மு.இ.உமர் அலி
2014 jUNE 8 — with பிரகாசக்கவி கவிதைகள்,Razana Manaf, Rijan Muhammadh and 42 others.
முழுக்க மூடிய தொட்டிகளில்
கிடந்தது அழுகுகின்றன
அளையாத
அன்னப்பற்பருக்கைகள்
குலையாமல் ஈக்களுக்காகவும்
ஏறும்புகளுக்காகவும்
இறைந்து கிடக்கின்றன
அத்தனை
சிறிய வயிறுகளுக்கு
எத்தனை பெரிய ஓரு விருந்து
அரைவாசி அருந்திய
பானங்கள்
அவலகாட்சிகளை
பிரசவிக்கின்றன!
இங்குள்ள
பூனைகள் எல்லாம்
நன்றாகக் தின்று
கொழுத்திருக்கின்றன
அவற்றிற்கு கொலஸ்டரோல்
கூட சற்று அதிகமாகவே
இருக்கும் என நினைக்கிறேன்.!
இந்த தேசம்
பசியால் படையடுத்தவர்களின்
ஊழியச்சாலை
இங்குள்ள குடிமக்களுக்கு
பசி என்றால் என்ன என்று படிப்பிப்பது
பிரம்ம பிரயத்தனமாக இருக்கிறது !
இப்போது நாங்களும் தற்காலிகமாக
இவர்களைப்போல
நடந்து கொள்கிறோம்
இல்லை
நடித்துக்கொள்கின்றோம்!
பசிக்க முதலே
புசிக்கிறார்கள்
தகிக்க முன்னரே
குடிக்கிறார்கள்
நமக்கெல்லாம்
தூக்கம் இரவில்
இவர்களுக்கு
இரவோ பகலில்!
பட்டிணிச்சாவால் பல
மானுட சாம்ராஜ்யங்கள்
சரிந்து
சாம்பலாகிக்கொண்டிருக்கும்
வேளையில்
கொட்டிக்குவிக்கிறார்கள்
உணவை கழிவு மலைகளாக
மனித நேயத்தை
குழிவெட்டிப் புதைத்தவர்கள் !
இந்தவூரின்
ஈக்காக்கைகளுக்கு இருக்கும்
பாக்கியம்கூட
அந்த ஆட்களுக்கு இல்லையே
இங்கே அறுசுவை உணவும்
உண்டியும்
அங்கே ஒருசுவையும் இன்றி
கஸ்டப்பட்டே சுரக்கின்ற
உமிழ்நீரை ஒன்றுக்குமேல்பட்ட தடவைகள்
விழுங்கி விழுங்கியே
அழிந்து போகும் ஆன்மாக்கள்!
மு.இ.உமர் அலி
2014 jUNE 8 — with பிரகாசக்கவி கவிதைகள்,Razana Manaf, Rijan Muhammadh and 42 others.
0 கருத்துக்கள்:
Post a Comment