சீனிப்புண்!
தசாப்தங்களாக
நானும் சர்க்கரை வியாதியும்
இணைபிரியாத நண்பர்கள்
உள்ளுக்குள் எதிரியாயிருந்தும்
கைவிடாத நட்பு!
ஊசியும் குளிசையும்
உருப்படியாக எதையுமே
சாதிக்கவில்லை
ஏசியும் பேசியும்
என்னை என்னாலேயே
திருத்தவும் முடியாமல் போயிட்டு!
வைபவங்களில் அதிதியாகினும்
அதிகம் எதையும் உண்ண முடியல
இனிப்புகளை என் கண்கள்
ஈயாகவே மொய்க்கும்
கைகள் எடுக்க எட்டினாலும்
மெய்யுணர்வு தட்டிப்பறிக்கும்!
இப்படித்தான் வாயக்கட்டி வயிற்றைக்கட்டி
எந்நாளும் வாழ்ந்தாலும்
எப்படியோ சீனி கூடித்தான் போகிறது!
உணர்வு மரத்த காலில்
எரிஞ்ச தணல் பட்டதோ
நெருஞ்சி முள் தைத்ததோ
தெரிஞ்சிக்க முடியல
இனி தெரிஞ்சாலும் பலனில்லை
வந்தது வந்ததுதான்!
குருவிச்சம் பழம்போல
பளபளப்பா செக்கச்செவேலென்று
சிவந்தகாலில் சிறு வீக்கமும் வந்தது
பெரிசா எடுக்கல நான்
கரிசனையும் காட்டல
லேசான கணகணப்பு
உடம்பில் கொஞ்சம் இளஞ்சூடு
பேசாம இருந்திட்டேன்
ரெண்டு பனடோலை போட்டுக்கிட்டு
நாட்கள் நடந்தன
இல்லை இல்லை வேகமாக ஓடின
நீலகண்டன் நிறம்போல
நிறம்மாறி வந்தது
இதுவரை கண்டுகொள்ளா மனம்
இதுகண்டு
பயந்து திடுக்கிட்டு விழித்தது!
அதுக்கிடையில் அது புரையோடி
போயிருக்க பொங்கி வழிந்தது
பாதம் புண்ணாகி
பொதும்பி இருந்தது!
வெதும்பின மாம்பிஞ்சாய்
அழுகி வடிந்தது
வெள்ளையுடன் செந்நிறமாய்
வெடுக்குடனே ஏதோ ஒழுகி வழிந்தது!
எனேக்கே சகிக்கல
அப்படி ஒரு வெடுக்கு
என் கண்ணே அதைப்
பார்க்கவும் விரும்பல!
இப்படி இருக்கையில
பெற்றபிள்ளை நெருங்கிடுமா
இல்ல உற்றார்தான்
தொடுவாரா?
கட்டியவர் மட்டும்தான்
தொட்டுத்தூக்குகிறார்
என்னை கட்டிக்கிட்டு அழுகின்றார்
பட்டுக்கிட்டு இழுக்கின்றார்!
ஆனால்
பனங்கொசுவும் பழ ஈயும்
கூப்பிடாம வந்திருந்து
சிற்றுண்டி உண்டு
புண்ணுடன் சிரித்திப்பேசிக்கிட்டு
கட்டிப்புரள்கிறது
துரத்தினாலும் போகாமல்
எனைச்சுற்றி வட்டமிட்டு பறக்கிறது!
எல்லார்க்கும் நான் கசக்க
இதுக்குமட்டும் இனிக்குதாக்கும்!
தலைவிதியை வைதுகொண்டு
விசிறுகிறேன்
பனையோலை விசிறியினால்!
மு.இ..உமர் அலி
31 May 31 — with Dawood Ahamed, Era Perummal,Govind Dhanda and 45 others.
தசாப்தங்களாக
நானும் சர்க்கரை வியாதியும்
இணைபிரியாத நண்பர்கள்
உள்ளுக்குள் எதிரியாயிருந்தும்
கைவிடாத நட்பு!
ஊசியும் குளிசையும்
உருப்படியாக எதையுமே
சாதிக்கவில்லை
ஏசியும் பேசியும்
என்னை என்னாலேயே
திருத்தவும் முடியாமல் போயிட்டு!
வைபவங்களில் அதிதியாகினும்
அதிகம் எதையும் உண்ண முடியல
இனிப்புகளை என் கண்கள்
ஈயாகவே மொய்க்கும்
கைகள் எடுக்க எட்டினாலும்
மெய்யுணர்வு தட்டிப்பறிக்கும்!
இப்படித்தான் வாயக்கட்டி வயிற்றைக்கட்டி
எந்நாளும் வாழ்ந்தாலும்
எப்படியோ சீனி கூடித்தான் போகிறது!
உணர்வு மரத்த காலில்
எரிஞ்ச தணல் பட்டதோ
நெருஞ்சி முள் தைத்ததோ
தெரிஞ்சிக்க முடியல
இனி தெரிஞ்சாலும் பலனில்லை
வந்தது வந்ததுதான்!
குருவிச்சம் பழம்போல
பளபளப்பா செக்கச்செவேலென்று
சிவந்தகாலில் சிறு வீக்கமும் வந்தது
பெரிசா எடுக்கல நான்
கரிசனையும் காட்டல
லேசான கணகணப்பு
உடம்பில் கொஞ்சம் இளஞ்சூடு
பேசாம இருந்திட்டேன்
ரெண்டு பனடோலை போட்டுக்கிட்டு
நாட்கள் நடந்தன
இல்லை இல்லை வேகமாக ஓடின
நீலகண்டன் நிறம்போல
நிறம்மாறி வந்தது
இதுவரை கண்டுகொள்ளா மனம்
இதுகண்டு
பயந்து திடுக்கிட்டு விழித்தது!
அதுக்கிடையில் அது புரையோடி
போயிருக்க பொங்கி வழிந்தது
பாதம் புண்ணாகி
பொதும்பி இருந்தது!
வெதும்பின மாம்பிஞ்சாய்
அழுகி வடிந்தது
வெள்ளையுடன் செந்நிறமாய்
வெடுக்குடனே ஏதோ ஒழுகி வழிந்தது!
எனேக்கே சகிக்கல
அப்படி ஒரு வெடுக்கு
என் கண்ணே அதைப்
பார்க்கவும் விரும்பல!
இப்படி இருக்கையில
பெற்றபிள்ளை நெருங்கிடுமா
இல்ல உற்றார்தான்
தொடுவாரா?
கட்டியவர் மட்டும்தான்
தொட்டுத்தூக்குகிறார்
என்னை கட்டிக்கிட்டு அழுகின்றார்
பட்டுக்கிட்டு இழுக்கின்றார்!
ஆனால்
பனங்கொசுவும் பழ ஈயும்
கூப்பிடாம வந்திருந்து
சிற்றுண்டி உண்டு
புண்ணுடன் சிரித்திப்பேசிக்கிட்டு
கட்டிப்புரள்கிறது
துரத்தினாலும் போகாமல்
எனைச்சுற்றி வட்டமிட்டு பறக்கிறது!
எல்லார்க்கும் நான் கசக்க
இதுக்குமட்டும் இனிக்குதாக்கும்!
தலைவிதியை வைதுகொண்டு
விசிறுகிறேன்
பனையோலை விசிறியினால்!
மு.இ..உமர் அலி
31 May 31 — with Dawood Ahamed, Era Perummal,Govind Dhanda and 45 others.
0 கருத்துக்கள்:
Post a Comment