தொடாமல்
தொட்டில் கட்டி
நிலவை மடியிலே
தாலாட்டுது நதி வெள்ளம் !
தொட்டில் கட்டி
நிலவை மடியிலே
தாலாட்டுது நதி வெள்ளம் !
காலில்லா நீ
நூலால் இறங்கினாயா?
நூலால் இறங்கினாயா?
வாலில்லா பட்டமாக
அறுந்து விழுந்தாயா?
அறுந்து விழுந்தாயா?
தொட்டுவிட்டுச் சென்றவனை
எட்டிப்பிடிக்க வந்து
முடியாமல்
துடியாய் துடிக்கிறாயா?
எட்டிப்பிடிக்க வந்து
முடியாமல்
துடியாய் துடிக்கிறாயா?
நதி முகத்தில்
பொட்டு வைத்து அது
நாணுவதை
காண்கிறாயா
பொட்டு வைத்து அது
நாணுவதை
காண்கிறாயா
திரியின்றி எரிந்தாலும்
தெளிவாக தெரிகின்றாய்
தெளிவாக தெரிகின்றாய்
தண்ணீரில் தவழ்கிறாய்
தரையுடன் கோபமோ?
0 கருத்துக்கள்:
Post a Comment