நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Friday, May 9, 2014

வெள்ளிக்கிழமை

வெள்ளிக்கிழமை

உலகம் உருவான நாள்
பலமும் பொருந்திய நாள்
நலங்கள் வழங்கும் நாள்
சங்கை பொருந்திய நாள்!

சரித்தரங்கள் உருவான இந்நாள்தான்
தரித்திரமும் போக்கும்
உயரமான உலகும் சரிந்து
கரிந்து சாம்பலாவதும் இந்நாளே!

வெள்ளிக்கிழமை விரைந்து
நீ பள்ளி செல்லு
உள்ளத்தால் இறைவனின்
பெயர் சொல்லு
உள்ளதில் நல்ல ஆடையோடு
பள்ளி முன்வரியில் போயமரு!

இறைமறை எடுத்தோதி
மனமதை தளர்வாக்கு
இறைமனம் கனிவாகும்
அவனருள் இனிப்பெருகும் !

உள்ளம் தூய்மையாக
கள்ளம் மாயமாகி மறைந்துவிடும்
பள்ளம் படுகுழியும்
இல்லாமல் போய்விடும்!

பக்தி பெருகட்டும்
பயத்தால் உள்ளம் உருகட்டும்
சுத்தி இருப்பதெல்லாம்
சூனியமாய் தெரியுமாடா
உள்ளத்தின் மத்தியிலே
இறை ஜோதி புரியுமடா!

ஜும்மா தின வாழ்த்துக்கள்!
2014 MAY 9TH

0 கருத்துக்கள்:

Post a Comment