Thursday, April 17, 2014
சேரி மழை
வெறுத்தது
குழாயடி வரிசை
மனம் ரசித்தது !
இயற்கையின் பரிசை!
...............................
மாரிகாலத்தில்
குளியலறையாய்
மாறிவிட்ட
குப்பத்து வாசல்கடை!
.....................................
எப்போதாவது
கிடைக்கும்
இலவச தூவல்
அதிலே நனைந்து
நல்லதோர் குளியல்
................................
ஒழுகுகின்ற கூரையின்கீழ்
மூலையிலே முடங்கியுள்ள
அன்னையை அறியாமல்
அழுகின்ற வானின் கீழ்
சிரிக்கின்ற சேரிச் சிறுவர்கள் !
Subscribe to:
Post Comments (Atom)
0 கருத்துக்கள்:
Post a Comment