நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Thursday, April 17, 2014

சேரி மழை

 
வெறுத்தது
குழாயடி வரிசை
மனம்  ரசித்தது !
இயற்கையின்  பரிசை!
...............................


















மாரிகாலத்தில்
குளியலறையாய்
மாறிவிட்ட
குப்பத்து வாசல்கடை!

.....................................

எப்போதாவது
கிடைக்கும்
இலவச தூவல்
அதிலே நனைந்து
நல்லதோர் குளியல்

................................

ஒழுகுகின்ற  கூரையின்கீழ்
 மூலையிலே முடங்கியுள்ள
 அன்னையை அறியாமல்
அழுகின்ற வானின் கீழ்
சிரிக்கின்ற  சேரிச் சிறுவர்கள் !

0 கருத்துக்கள்:

Post a Comment