அளவுமீறி
அருந்தியதால்
அவர்கள் எடுக்கும் வாந்தி
இது ஒருபோதும்
அழகாக இருக்காது
அருவருப்பாகவே இருக்கும் !
இதனால் ஆற்றங்கரை கூட
அமைதியை இழக்கும்
சுற்றி இருப்பவரின்
மதியையும் குழப்பும்!
ஆங்கில ஆசான்
கட்டணமின்றி படித்துத்தந்த
பிரத்தியேக பாடம்
திரைப்படங்கள்
நடாத்தும்
இலவசப்பள்ளிக்கூடம்!
காட்சியின் விளைவு இது
காட்சியாய்
விளைந்திருக்கு!
காதல் என்ற சொல்லுக்கு
நவீன அகராதி கொடுக்கும்
அநாகரீக விளக்கம்!
உமர் அலி முகம்மதிஸ்மாயில்
2014 April 5th
கவிதை வயலுக்கு எழுதியது
0 கருத்துக்கள்:
Post a Comment