விருந்தும் மருந்துதான்
மிதமிஞ்சிப் போய்விடின்
வருத்தும் வருத்தம்தான் !
அதிகம் ஆவென்று சொல்லும் வாய்
நோயை வாவென்று அழைக்குமடா!
ஆசை முழுதும் தணியாது போயின்
பாயில் உன்னை நோயாலே விழுத்துமடா!
மூத்தம்மா மூத்தப்பா
முன்னோர்கள் உண்டதெல்லாம்
மூலிகைச் சாப்பாடு
நாமெல்லாம் உண்பதுவோ
கேளிக்கைச் சாப்பாடு!
உணவகங்கள் பெருகி
உனது சுகம் அருகி
மருந்தகங்கள் போகிறாய்
மாத்திரைகள் போடுராய்!
பளபளக்கும் நஞ்சு
பல சுவைகள் நிறைந்து
உளம் சுவைக்கும் உவந்து
நலம் கெடுவது
புரிந்திடாமல் நின்று!
அளவாய் உணவருந்து
அதிகம் நீ நீரருந்து
தவிர்ப்பாய் நீ மருந்து!
உமர் அலி முகம்மதிஸ்மாயில்
0 கருத்துக்கள்:
Post a Comment